மீண்டும் தீவிரமாகும் மான்டோஸ் பகுதி. அடுத்த நிகழ்வும் ஆயத்தம். மழை எப்படி?

2022 டிசம்பர் 11 அதிகாலை ஆய்வறிக்கை: வங்கக் கடலில் இருந்து மாமல்லபுரம் வழி கரை கடந்த மான்டோஸின் செயலிழந்த பகுதி தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வடக்கு பகுதியை மையமாக வைத்து தமிழகத்தின் மீது நீடித்துக் கொண்டுள்ளது. இது பெங்களூரு ,மைசூர், மங்களூரு, குடகு ,வயநாடு வழியாக டிசம்பர் 12 அரபிக்கடலில் இறங்கும். தற்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டம் தாழ்வு பகுதியாக நீடிக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வானம் மேகம் சூழ்ந்து காணப்படும். பனிப்பொழிவு போன்ற ஒரு வானிலை நிலவும். தெற்கு ஆந்திர பிரதேசம், தெற்கு கர்நாடகா பகுதிகளிலும் கடலோர கர்நாடகா ஒட்டுமொத்த கேரளா தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் ஆகிய இடங்களில் தற்போது மழை பொழிகிறது.

இது மேற்கு நோக்கி நகர்ந்த பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மாலை இரவு வெப்ப சலன மழை போல கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு காற்றல் டிசம்பர் 14 வரை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மழை பொழியும். பெய்யும் இடத்தில் கனமடையாக பெய்யும். கடலோரத்தில் அதிகாலையிலும் காலையிலும் உள் மாவட்டங்களில் மதியம் மாலை நேரங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மாலை இரவு நள்ளிரவு அதிகாலை நேரங்களிலும் மழை பொழியும்.டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 16 முற்பகல் மட்டும் இடைவெளி கிடைக்கும்.டிசம்பர் 11 12 13 14 ஆகிய தேதிகளில் வெயில் காணப்பட்டாலும் அதிகாலை காலை நேரங்களில் மாலை இரவு நேரங்களில் மழை பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும்.டிசம்பர் 13 தெற்குஅந்தமான் கடற் பகுதிக்கு வரும் தென் சீனக் கடல் காற்று சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி டிசம்பர் 16ஆம் தேதி இலங்கையை தொட்டு டிசம்பர் 16 இரவு டெல்டா மாவட்ட கரையை நெருங்கி வந்து வட இலங்கை மற்றும் டெல்டா மாவட்டங்கள் இடைப்பட்ட பகுதிக்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கன மிக கனமழையை கொடுப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக பிறகு டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மதிய உள் மாவட்டங்கள் வழியாக டிசம்பர் 18 வரை மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 20 21 22 இல் அரபிக் கடலில் இறங்கி கிழக்கு காற்றை ஈர்த்தும் டிசம்பர் 22 வரை மழை பொழிவை கொடுக்கும்.

டிசம்பர் 24 க்கு முன் ஒரு காற்று சுழற்சி அமைந்து கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் வரை மழை பொழிவை கொடுக்கும். கிறிஸ்மஸ்க்கு இடைவெளி கொடுத்து கிறிஸ்மஸுக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தீவிர நிகழ்வு தமிழகம் நெருங்கி ஜனவரி 3 வரை நல்ல மழைப்பொழிவு கொடுக்கும். இப்படி பொங்கலுக்கு முன் ஒரு நிகழ்வும் உங்களுக்கு பின் ஒரு நிகழ்வும் என ஜனவரி 20 வரை நிகழ்வுகளால் வடகிழக்கு பருவமழை தொடரும்.நல்ல மழைப்பொழிவு இருக்கிறது, வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .அனைத்து ஏரி குளங்களும் நிரம்பும் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பொழிய காத்திருக்கிறது. கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *