நடுக்கும் குளிர் விலகல்.எப்போது? ஜன 22 க்கு மேல் ஜன 30 க்குள் மழை எங்கெங்கே?

2023 ஜனவரி 12 அதிகாலை ஆய்வறிக்கை.

இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சியும்
தெற்கு அந்தமான்- சுமத்ரா இடைப்பட்ட கடற்பகுதி காற்று சுழற்சியும் இணைந்து நிலநடுக்கோட்டுப் பகுதியில் சற்று தீவிரமடைந்து நீடிக்கிறது.

வடதுருவக் குளிரலை வங்கக்கடல் வழியாகவும் அரபிக்கடல் வழியாகவும் நில நடுக்கோட்டு பகுதியை நோக்கி பயணிக்கிறது.

கடற்காற்று நிலப் பகுதியில் முழுமையாக ஏறவில்லை. பாக் நீரிணைப்பு, மன்னார் வளைகுடா வழியாக செல்லும் காற்று கடலோர பகுதியை மட்டும் தொட்டுச் செல்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய விட இன்று சற்று குறைந்த உறைபனி நிலவுகிறது.
சில இடங்களில் வெப்பநிலை மைனஸ் 1 வரை
தொட்டது. ஆங்காங்கே குறைந்தபட்ச வெப்பநிலை -1’C ,0’C +1’C,+2’C என்ற நிலை நீடிக்கிறது.

பிற மாவட்டங்களை நடுங்க வைக்கும் குளிர் காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 20 வரை உறைபனி காணப்படும்.
பிற மாவட்டங்களில் நடுங்கும் குளிர் ஜனவரி 20 வரை தொடரும்.

அடுத்தடுத்த நிகழ்வுகள்

அடுத்தடுத்து பசிபிக் பெருங்கடல் முதல் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் குமரிக்கடல் பகுதி வரை (பசிபிக் பெருங்கடல், தென் சீனக்கடல், தாய்லாந்து வளைகுடா, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ) நிகழ்வுகள் நீடிக்கின்ற காரணத்தினால் தென் அரைக்கோளம் நோக்கிச் செல்லும் வட துருவ குளிர் அலை பிரிக்கப்பட்டு தென் அரைக்கோளம் நோக்கி பயணிக்கிறது.

ஜனவரி அமைவுகள்

நிகழ்வு எண் 1 மற்றும் 2 நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து குளிர் மட்டும் கொடுக்கும்.
நிகழ்வு எண் 3 மற்றும் 4 ஜனவரி 22 முதல் 30 வரை தேதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பொழிவை கொடுக்கும் வகையில் சாதக அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு தெரிகிறது.

அடுத்தடுத்த நிகழ்வு எண் 3,4

காற்று சுழற்சி ஜனவரி 18 முதல் 24 வரை இலங்கையை நெருங்கி, ஜனவரி 22 23 24 தேதிகளில் இலங்கைக்கு கனமழை கொடுத்து வட இலங்கைக்கு மிதமானது முதல் சற்று கனமழையை கொடுத்து ,தமிழகத்திற்கு கடலோர மாவட்டங்கள் தென் மாவட்டங்களுக்கு மழை பொழிவை கொடுக்க சாதக சூழல் தென்படுகிறது. உள் மாவட்டங்களிலும் மழை கொடுத்த வாய்ப்பு தெரிகிறது.


அதன் தீவிரத் தன்மை ஆய்வில் இருக்கிறது.
நிலநடுக்கோட்டு பகுதி நிகழ்வு மடகாஸ்கர் நோக்கி விலகி செல்லும் என்பதால், நிலநடுக்கோட்டு வெப்ப காற்று கிடைக்கப் பெற மழை வாய்ப்பு ஏற்படுத்தும் என்று தெரிகிறது. செட்டிங் செட் ஆவது எப்படி? ஆய்வு தொடர்கிறது.

நிகழ்வு தொடர்ந்து இலங்கை அருகே நீடித்து ஜனவரி 25 26 தேதிகளில் தென் கடலோரம் டெல்டா கடலோரம் மழை வாய்ப்பு கொடுக்க சாதகம் தெரிகிறது.

அதே நிகழ்வு அடுத்த நிகழ்வுடன் இணைந்து
ஜனவரி 25 26 தேதிகளில் இணைந்து தீவிரமடைந்து இலங்கையை நெருங்கி வர வாய்ப்பு தெரிகிறது. இதன் காரணமாக ஜனவரி 27 28 29 30 தேதிகளில் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தெரிகிறது.
அதன் நகர்வு தீவிரத் தன்மை ஆய்வில் உள்ளது.

அனைத்து நிகழ்வுகளுக்கும் இன்னும் நாட்கள் இருக்கின்றன. வரக்கூடிய நாட்களில் துல்லியம் தெரியவரும்.

ஜனவரி 22 க்கு மேல் ஜனவரி 30க்குள் கொடுக்கும் மழைப்பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே அமையும், கடலோரம் தென் மாவட்டங்கள் தென் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கூடுதல் வாய்ப்பு.

பாதிக்கும் மழையாக இருக்காது.

அச்சமின்றி, இடைவெளி அறிந்து ,ஆறுவடை செய்க.

ந. செல்வகுமார்.

தமிழ்நாடு அருகேஉருவாகும் தாழ்வு.கொட்டப்போகும்மழை. எங்கெங்கே?

வேகமாக உருவாகும் தாழ்வுப்பகுதி நிறைய மழை எச்சரிக்கை!

அதிகாலை வானிலை ஆய்வறிக்கை: தீபாவளி வரை மழை தொடரும்

தென்மாவட்டங்களில் கனமழை! அக். 15 பருவக்காற்று மாற்றம்; வடகிழக்கு அக். 18-19 தொடக்கம். விவசாயிகள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்.

இன்றைக்கும் கனமழை நிச்சயம்: 100 நாட்கள் மழை உறுதி! டெல்டா விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

 தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: 

விவசாயிகள் கவனத்திற்கு! அறுவடை நேரத்தில் மழை: அக்டோபர் 10-17 மிக கனமழை வாய்ப்பு – முழு விவரம்

2025 அக்டோபர் மழை – வடகடலோரம், டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

செப்டம்பர் 26க்கு பின் மழை நிலவரம், அறுவடை எச்சரிக்கை & அக்டோபர் பருவமழை

செப்டம்பர் 24–அக்டோபர் 15 : தென்மேற்கு பருவமழை, புயல் அபாயம் மற்றும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©2025 SELVAKUMAR WEATHER WordPress Video Theme by WPEnjoy