மார்ச் 15 முதல் தொடங்கும் வெப்பச்சலன இடி மழை. எங்கே? எப்படி?

2023 மார்ச் 6 திங்கள் இரவு ஆய்வறிக்கை

2023 மார்ச் 6 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை

2023 மார்ச் 6 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை
மார்ச் 6,7 வானிலை
தெளிவாக வானம்,கடும் வெயிலுக்கு இடையே டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மதியம் மட்டும் வானம் மேகம் சூழ்ந்து காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

மார்ச் 8,9,10 வானிலை
காற்று சுழற்சிகள் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு தெற்கே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மார்ச் 8,9,10 தேதிகளில் மதிய நேரம் மட்டும் கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மட்டும் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி ஓரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு தெரிகிறது.
இராமநாதபுரம் வடக்கு ,புதுக்கோட்டை கடலோரம் தெற்கு டெல்டா கடலோரம் கடலோரம் தூறல் வாய்ப்பு தெரிகிறது. மார்ச் 8,9,10 மதிய நேரம் மட்டும் டெல்டா மற்றும் தென் தமிழ்நாடு பிற பகுதிகள் வேகம் சூழ்ந்து குழப்பமான வானிலை மட்டும் கொடுக்கும்.


மார்ச்11,12,13,14 வானிலை
தென் தமிழ்நாட்டில வெயிலுக்கு மதியம் இடையே வானம் மேகம் சூழ்ந்து காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

மார்ச் 15 க்கு மேல் வானிலை
மார்ச் 15க்கு மேல் கிழக்கு காற்று வேகம் குறையும். வெயில் அதிகரிக்கும் வெப்பச்சலன மழை கேரள எல்லையோர மாவட்டங்கள் கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி தொடங்கும் . வெப்பச்சலன இடி மழை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் கடும் வெயில் வாட்டும் நிலையில் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவில் இடி மழை இருக்கும் தவிர பரவலாக இருக்காது அருகருகே பொழியும்.வெப்ப சலன இடி மழை மாலை இரவு நேரங்களில் வடகடலோரம் வட உள் மாவட்டங்களுக்கும் தென் கடலோரம் தென் உள் மாவட்டங்களுக்கும் மத்திய மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்த நாள்களில் கிடைக்க வாய்ப்புண்டு.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
6.3.2023-4AM வெளியீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *