தமிழ்நாட்டில் மழை தீவிரம் எப்போது? மாலை இரவு இடிமழை எங்கெங்கே?

2023 ஜூன் 28 புதன் அதிகாலை ஆய்வறிக்கை:

ஒடிசா மேற்குவங்கம் இடைப்பட்ட ப தாழ்வு பகுதி ஜார்கண்ட், சட்டிஸ்கர் நகர்ந்து தற்போது மத்திய பிரதேசத்தில் மேற்கு நோக்கி நகர்கிறது

வட இந்திய நிலப் பகுதியில் ஒருங்கிணைந்த காற்று சுழற்சி நீடிக்கிறது.
இது ராஜஸ்தான் வரை தென் மேற்கு பருவமழையை எடுத்து செல்ல இருக்கிறது.

தாழ்வு பகுதி மற்றும் காற்று சுழற்சி குஜராத் மகாராஷ்ட்ரா கோவா வழியாகவும் காற்றை ஈர்க்கிறது.

கன்னியாகுமரி முதல் குஜராத் வரை கடலோரம் வழியாக தென்மேற்கு பருவக்காற்று பரவலாக நுழைகிறது.
இதில் வடக்கு கர்நாடகா வழியாக கூடுதல் சதவீதம் நுழைகிறது.

கேரளா கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை லேசாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்(நீலகிரி, வால்பாறை) லேசான மிதமான பருவமழை இருக்கும்.

தமிழ்நாட்டில் மாலை இரவு வெப்பச்சலன மழை அனைத்து மாவட்டங்களுக்கும் இருக்கும்.

ஜூன் 28 செவ்வாய் மாலை கணவாய் நுழைவு வாயில்களில் லேசான மழை தெரிகிறது.

மலை மறைக்கும் பகுதியாகிய ஈரோடு வடக்கு, மதுரை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை உறுதி.

கிருஷ்ணகிரி,தர்மபுரி தொடங்கி வங்கக் கடலோர வரை மாலை இரவு இடிமழை கூடுதல் பரப்பில் இருக்கும்.

தினசரி மாலை இரவு மழை பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும்.
மேற்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் அனைத்து உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பொழிவு இருக்கும்

கூடுதல் மழை வாய்ப்பு நாள்கள்

ஜூலை 1இல் அந்தமான் கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகி
ஜூலை 2ல் அந்தமான் ஆந்திர பிரதேசம் இடைப்பட்ட பகுதியில் அமைந்து ஜூலை 3 முதல் தென்மேற்கு பருவமழையை மீண்டும் தொடங்கும்
ஜூலை 3 ஆந்திர ஒடிசா இடைப்பட்ட பகுதியில் தாழ்வு நிலையாகி ஜூலை4,5,6 தேதிகளில் ஒடிசா மேற்குவங்கம் இடைப்பட்ட தாழ்வு பகுதியில் பகுதியாகி ஜூலை 4 5 6 7 தேதிகளில் தென்மேற்கு பருவமழையை கேரளாவில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரப் படுத்தும் போது தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் சாரல் மழை கிடைக்கும் காற்று பகுதிக்கும் மழை கிடைக்கும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிவு கிடைக்கும்.

அதற்கு அடுத்த நிகழ்வு

ஜூலை 10 தேதி வாக்கில் புதிய நிகழ்வு உருவாகி ஜூலை 12 முதல் 15 வரை மீண்டும் கேரளாவில் தென்மேற்கு பருவமடைய தீவிரப்படுத்தும் அப்போதும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் மலைப்பகுதிகள் காற்று பகுதிகளில் மழை கிடைக்கும்.

ஜூலை 15 வரை சீரான மிதமான சற்று கனமான தென்மேற்கு பருவமடைக்கு மட்டுமே வாய்ப்பு.

டெல்டா உள் பகுதி உட்பட ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை கிடைக்கும்.

காற்றுப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் வறண்ட வானிலையும் உண்டு வானிலை மாறி மழையும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் மாறும் எல்லாம் கலந்து இருக்கும். பிபப்பர் ஜாய் புயல் தற்பொழுது உங்களை குழப்பத்தில் தள்ளி இருக்கிறது. படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.

எல் நினோ அச்சம் வேண்டாம்

பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் என்று பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி3 செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது. எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.
எல்-நினோ கவலை வேண்டாம்.

தற்பொழுது வங்கக் கடலில் உருவாகி இருக்கக்கூடிய நிகழ்வு வலுவான மேற்கு காற்ற இருப்பதால் ஜூன் இறுதி வரை பாலக்காடு கணவாய் ஆரியங்காவு கணவாய் வழியாக நுழையும் காற்று வலுவாக இருக்கும்.
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் காற்றின் வேகம் குறைந்து இருக்கும் ஒரு சில நாட்கள் அதிகரித்து இருந்தாலும் குறைந்திருக்கும் நாட்களில்
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.
தற்பொழுது வீசும் தென்மேற்கு வறண்ட காற்று மழை பொழிவை தடுக்கிறது இது உங்களுக்கு குழப்பத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துகிறது. இது போல இந்த ஆண்டு இருக்கும் என்று உங்களை கற்பனையில் ஆழ்த்துகிறது.

நாம் அறிவித்தது போல ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபரில் தென்னிந்தியாவிற்கு சிறப்பான மழை இருக்கிறது புரிந்து பொறுமையுடன் இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
வாய்ப்பு தெரிகிறது.

ந. செல்வகுமார்.
28.6.2023-4AM வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *