தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள வெப்பச்சலன மழையும் பருவமழையும் உங்களுக்கு எப்படி?

2023 ஜூலை 22 சனிக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை

தென்மேற்கு பருவமழை ஆந்திர பிரதேசத்தின் வடக்கு பகுதி, ஒட்டுமொத்த தெலுங்கானா, ஒடிசா,சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களை மையமாக வைத்து சுழற்சி அதீத கனமழை பொழிவு வரை கொடுக்கும்.

இதன் காரணமாக கர்நாடகாவின் கடலோர பகுதிகள் கேரளாவின் கடலோரப் பகுதிகள் தென்மேற்கு பருவமழை சற்று வலுப்பெறும்.
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கணவாய் பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை சாரல் மழையாக பொழியும்.

இனிமேல் தென்மேற்கு பருவமழையில் பெரிய இடைவெளி அமையாது.
அரை நாள் ஒரு நாள் மட்டுமே தென்மேற்கு பருவமழை இடைவெளி அமையும்.

தமிழ்நாட்டிலும் ஜூலை 22 முதல்
ஈரக்காற்று நுழையும் என்பதனால் மாலை இரவு வெப்ப சலனம் மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழையுடன் இணைந்து ஆங்காங்கே பொழியும்.

தென் மாவட்டங்களிலும் கேரள எல்லையோரம் மாவட்டங்களிலும் கர்நாடக எல்லையோர மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோரம் மாவட்டங்களிலும் வட உள் மாவட்டங்களிலும் மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவு சாரல் மழை இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில்
குறைவான பரப்பில் ஒரு சில நாட்கள் மழை இருக்கும்.
ஜூலை 22 வடக்கு டெல்டா மேற்கு டெல்டாவில் மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே இடி மழை பொழிவு இருக்கும்.
ஜூலை 23 ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பரப்பில் மழை எதிர்பார்க்கலாம்.
ஜூலை 24 25 மாவட்டங்களுக்கும் மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெய்யாது .

ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவில் பொழியும்.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் நள்ளிரவு அதிகாலை நேரங்களில்
ஜூலை 24 25 தேதிகளில்
லேசான மிதமான மழை எதிர்பார்க்கலாம்.

மேலும் ஜூலை 25,26,27 இல் ஒரு நிகழ்வு காத்திருக்கிறது.
இந்த நிகழ்வு மீண்டும் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகாவின் வட கிழக்கு பகுதிகள் மகாராஷ்டிராவில் உள்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகள் அதிக மழை பொழிவை கொடுக்கும்.

அந்த சுற்று கூடுதல் தென்மேற்கு பருவமழையை கேரளா கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கும் கொடுக்கும்.

ஜூலை இறுதி நிகழ்வு ஒடிசாவின் வடக்கு பகுதியில் அமையலாம். அந்த ஒரு நிகழ்வு மழை பொழிவை கேரளா கர்நாடகாவில் அந்த ஓரிரு நாள்களில் மட்டும் குறைக்கலாம்.

ஆகஸ்ட் சிறந்த மழை கொடுக்கும்.

*ஆகஸ்ட் 15 க்கு மேல் அக்டோபர் 20 வரை தெற்கு பருவமழையும் தமிழ்நாட்டில் காற்று சுழற்சி வெப்பச்சலன மழையும் சிறப்பாக அமையும்.

மேட்டூர் மட்டம் இறங்கு முகத்தில் இருந்தாலும் மேட்டூரில் இருப்பு 15 டிஎம்சி குறையும் முன்பே கர்நாடகா நீர் கிடைக்கும் வகையில் கர்நாடகாவில் மழைப்பொழிவு அமையும்.

கர்நாடக அணைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தின் பின் பகுதியில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

செப்டம்பர் அக்டோபர் உபரி நீர் கொடுக்கும் வகையில் மழை இருக்கும்.

தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20 வரை தொடர வாய்ப்பு உள்ளது.

படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.*

எல் நினோ அச்சம் வேண்டாம்
பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் என்று பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி3 செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது. எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில்0 வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.

தற்பொழுது வங்கக் கடலில் உருவாகி இருக்கக்கூடிய நிகழ்வு வலுவான மேற்கு காற்ற இருப்பதால் ஜூன் இறுதி வரை பாலக்காடு கணவாய் ஆரியங்காவு கணவாய் வழியாக நுழையும் காற்று வலுவாக இருக்கும்.
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் காற்றின் வேகம் குறைந்து இருக்கும் ஒரு சில நாட்கள் அதிகரித்து இருந்தாலும் குறைந்திருக்கும் நாட்களில்
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.
தற்பொழுது வீசும் தென்மேற்கு வறண்ட காற்று மழை பொழிவை தடுக்கிறது இது உங்களுக்கு குழப்பத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துகிறது. இது போல இந்த ஆண்டு இருக்கும் என்று உங்களை கற்பனையில் ஆழ்த்துகிறது.

நாம் அறிவித்தது போல ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபரில் தென்னிந்தியாவிற்கு சிறப்பான மழை இருக்கிறது புரிந்து பொறுமையுடன் இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.3
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
வாய்ப்பு தெரிகிறது.*

ந. செல்வகுமார்.
22.7.2023-4AM வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *