பருவமழையும் இடிமழையும் சற்று தீவிரம்..இன்றும் வரும் நாள்களும் எப்படி?

2023 ஜூலை 24 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை

தென்மேற்கு பருவமழை ஆந்திர பிரதேசத்தின் வடக்கு பகுதி, ஒட்டுமொத்த தெலுங்கானா, ஒடிசா,சட்டீஸ்கர், மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களை மையமாக வைத்து சுழற்சி அதீத கனமழை பொழிவு வரையும் கடலோர பகுதிகள் கேரளாவின் கடலோரப் பகுதிகள் தென்மேற்கு பருவமழை சற்று வலுப்பெறும்.
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கணவாய் பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை சாரல் மழையாக பொழியும்.

இனிமேல் தென்மேற்கு பருவமழையில் பெரிய இடைவெளி அமையாது.
அரை நாள் அல்லது சில மணி நேரங்களில் மட்டுமே தென்மேற்கு பருவமழை இடைவெளி அமையும்.

தமிழ்நாட்டிலும்
ஈரக்காற்று நுழைய தொடங்கியதால் மாலை இரவு வெப்ப சலனம் மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழையுடன் இணைந்து ஆங்காங்கே பொழிகிறது.

கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் தொடங்கிய மழை திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை மாவட்டங்களில் விடிய விடிய மழை பொழிவை கொடுத்தது.

விடிந்தும் வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்ளிட்ட வடகடலோரம் காலையும் தூறல் தொடரும்.

தென் மாவட்டங்களிலும் கேரள எல்லையோரம் மாவட்டங்களிலும் கர்நாடக எல்லையோர மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோரம் மாவட்டங்களிலும் வட உள் மாவட்டங்களிலும் மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவு சாரல் மழை இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில்
குறைவான பரப்பில் ஒரு சில நாட்கள் மழை இருக்கும்.
ஜூலை 23 வடக்கு டெல்டா மேற்கு டெல்டாவில் மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே இடி மழை பொழிவு இருக்கும் என்ற அறிவிப்பு போலவே ஒரத்தநாட்டிற்கு மேற்கே யும் கொள்ளுமாங்குடிக்கு வடக்கையும் மயிலாடுதுறை மாவட்ட பகுதிகள் தஞ்சாவூர் மாவட்ட வடக்கு பகுதிகள் மழை பொழிவு அமைந்தது.

ஜூலை 24 25 டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கும் மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெய்யாது .

ஒதுக்கி ஒதுக்கி22 ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவில் பொழியும்.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் நள்ளிரவு அதிகாலை நேரங்களில்
ஜூலை 24 25 தேதிகளில்
லேசான மழை எதிர்பார்க்கலாம்.

மேலும் ஜூலை 25,26,27 இல் ஒரு நிகழ்வு காத்திருக்கிறது.
இந்த நிகழ்வு மீண்டும் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகாவின் வட கிழக்கு பகுதிகள் மகாராஷ்டிராவில் உள்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகள் அதிக மழை பொழிவை கொடுக்கும்.

அந்த சுற்று கூடுதல் தென்மேற்கு பருவமழையை கேரளா கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கும் கொடுக்கும்.

ஜூலை இறுதி நிகழ்வு ஒடிசாவின் வடக்கு பகுதியில் அமையலாம். அந்த ஒரு நிகழ்வு மழை பொழிவை கேரளா கர்நாடகாவில் அந்த ஓரிரு நாள்களில் மட்டும் குறைக்கலாம்.
மழை தொடரும்.

ஆகஸ்ட் சிறந்த மழை கொடுக்கும்.

ஆகஸ்ட் 15 க்கு மேல் அக்டோபர் 20 வரை தெற்கு பருவமழையும் தமிழ்நாட்டில் காற்று சுழற்சி வெப்பச்சலன மழையும் சிறப்பாக அமையும்.

மேட்டூர் மட்டம் இறங்கு முகத்தில் இருந்தாலும் மேட்டூரில் இருப்பு 15 டிஎம்சி குறையும் முன்பே கர்நாடகா நீர் கிடைக்கும் வகையில் கர்நாடகாவில் மழைப்பொழிவு அமையும்.

கர்நாடக அணைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தின் பின் பகுதியில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

செப்டம்பர் அக்டோபர் உபரி நீர் கொடுக்கும் வகையில் மழை இருக்கும்.

தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20 வரை தொடர வாய்ப்பு உள்ளது.

படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *