கடலோரமும் உயரும் கடும் வெப்பம். மாலை மழைஎங்கெங்கே?

2023 மே 18 வியாழன் அதிகாலை ஆய்வறிக்கை.

சூரியனின் குத்துக்கதிர் வடக்கே போனதால் வடக்கே நேற்று வரை ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநில நிலத்தில் தாழ்வு சுழற்சி நிகழ்வு இருப்பததால் தெற்கு காற்று வேகமாக வடக்கு நோக்கி தமிழ்நாடு கரை ஓரமாகவும் கரை எறியும் , தெற்கு டெல்டா நுழைந்தும் வடக்கு நோக்கி பயணித்தது.

இன்று வட கிழக்கு மாநிலங்கள், வங்கதேசம், மேற்கு வங்கம் நோக்கி கரைமட்டும் தொட்டு தரை ஏறாமல் மதியம் பயணிக்கும் என்பதால் நேற்று, நேற்று முன்தினம் விட கடலோரமும் வெப்பம் அதிகரித்து புழுக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும்.

மாலை நேரம் கடல் காற்று உள்ளே வீசும். இது வழக்கமாக வைகாசி மாதத்தில் வீசும் காற்றுதான் அச்சப்படா வேண்டாம்.

மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே காற்றுடன் இடி மழை இருக்கும்.

வடமேற்கு லேசான காற்றுடன் மாலை கடற்காற்று சந்திப்பு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மேற்கு, விழுப்புரம் மேற்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மழை கொடுக்கும்.
பெய்யும் இடங்களில் அரைமணி நேரத்திற்கு மேல் நீடிக்காது.

கடலோரம் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை.

கடலோரம் மே 25க்கு மேல்தான் தெரிகிறது.

வங்கக் கடலோர மாவட்டங்கள் கடும் வெப்பம், புழுக்கம் நிலவும்.

C’-F’
38-100.4
39-102.2
40-104
41-105.8
42-107.6
43-109.4
44-111.2
சென்னை விமான நிலையத்தில் 43’C அதாவது 109.4’F வெப்பம் உயரும்.

அனைத்து மாவட்டங்களிலும் 102’F டிகிரிக்கு மேல் வெப்பம் உயரும்.

மேற்கு மாவட்டங்களிலும் கேரளா கர்நாடகா விலும் வெப்பம் உயரும்.அங்கும் 100 ‘F க்கு மேல் வெப்பம் உயரும்.

மே 18 க்கு மேலும் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் வரை வெயில் வெப்பம் புழுக்கம் தொடரும் அதே நேரத்தில் மே 17 க்கு பிறகு கர்நாடகா எல்லை ஓரம் தொடங்கி படிப்படியாக அடுத்தடுத்த நாள்களில் மாலை இரவு வெப்பச்சலன இடிமழை கிழக்கு பகுதி நோக்கி முன்னேறும்.

மே 21 க்கு மேல் வெயிலுக்கு பின்னர் மேற்கு மாவட்டங்கள், அனைத்து உள்மாவட்டங்கள் மாலை இரவு ஆங்காங்கே இடிமழை கிடைக்கும்.

கடலோரம் தெற்கு காற்றின் காரணமாக முன்னேறுவதில் சிரமப்பட்டு கடலோரம் எட்டாமல் செயலிழக்கும்.
ஜூன் முதல் வாரத்திலும் இதே வெப்ப அலை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஜூன் 2:க்கு மேல் இலங்கை, குமரிக்கடல் கேரளா ஒட்டிய அரபிக்கடலில் ஒரு நிகழ்வு உருவாகி ஜூன் 4,5,6,7 இல் கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடக்கும்.

ஜூன் 7,8,9 தேதியில் வடக்கு வங்கக்கடலிலும் தாழ்வு உருவாகி பருவமழை தீவிரப்படுத்தும்.

எல் நினோ அச்சம் வேண்டாம்

பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது. எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.
எல்-நினோ கவலை வேண்டாம்.

தென்மேற்கு பருவமழை 2023
குமரிக்கடல் அதனை ஒட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் தாழ்வு நிலை உருவாகி தீவிரமடைந்து கேரளா கர்நாடகா கோவா மகாராஷ்டிரா குஜராத் வடக்கு நோக்கி நகர்ந்து
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடக்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு/ நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
18.5.2023-4AM வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *