இன்று கனமழை எங்கே?வரும் நாள்கள் எப்படி? அடுத்த தீவிர நிகழ்வால் மழை எங்கே? எப்படி?

டிசம்பர் 13 தெற்குஅந்தமான் கடற் பகுதிக்கு வரும் தென் சீனக் கடல் காற்று சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி டிசம்பர் 16ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்று இலங்கையை தொட்டு டிசம்பர் 17 டெல்டா மாவட்ட கரையை நெருங்கி வந்து வட இலங்கை மற்றும் டெல்டா மாவட்டங்கள் இடைப்பட்ட பகுதிக்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கன மிக கனமழையை கொடுப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.டிசம்பர் 18க்குள் அடுத்த மழை தொடங்கி கிறிஸ்மஸ்க்கு ஒரு இடைவெளி கொடுத்து டிசம்பர் இறுதியில் தாண்டி ஜனவரி 3 வரை மழைப்பொழிவு உறுதியாக தெரிகிறது.

டிசம்பர் 17 வட இலங்கை வரும் தாழ்வு பகுதி அல்லது தீவிர தாழ்வு பகுதி டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் வழியாக டிசம்பர் 21வரை மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 22,23,24 இல் அரபிக் கடலில் இறங்கி கிழக்கு காற்றை ஈர்த்தும், தமிழக கரையோரம் மேலும் ஒரு காற்று சுழற்சி நீடிக்க டிசம்பர் 24 வரை மழை பொழிவை கொடுக்கும். டிசம்பர் 24 க்கு முன் ஒரு காற்று சுழற்சி அமைந்து கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் வரை மழை பொழிவை கொடுக்கும். கிறிஸ்மஸ்க்கு இடைவெளி கொடுத்து கிறிஸ்மஸுக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தீவிர நிகழ்வு தமிழகம் நெருங்கி டிசம்பர் 28 29 30 31 ஜனவரி 1,2,3 தீவிர நிகழ்வால் மழைப்பொழிவு கொடுக்கும். டிசம்பர் இறுதி நாள்கள் நிகழ்வு புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இப்படி பொங்கலுக்கு முன் ஒரு நிகழ்வும் பொங்கலுக்கு பின் ஒரு நிகழ்வும் என ஜனவரி 20 வரை நிகழ்வுகளால் வடகிழக்கு பருவமழை தொடரும்.
நல்ல மழைப்பொழிவு இருக்கிறது, வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .
அனைத்து ஏரி குளங்களும் நிரம்பும் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பொழிய காத்திருக்கிறது. கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும். பல மாவட்டங்களில் சராசரிக்கு மிகவும் கூடுதல் மழையும், மேலும் பல மாவட்டங்களில் சராசரிக்கு கூடுதல மழையும், சில மாவட்டங்களில் சராசரி மழை என்ற நிலையை அடையும். குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *