குமரிக்கடலில் தாழ்வுப்பகுதி.வானிலை எப்படி?

2022 டிசம்பர் 26 மாலை 6 மணி ஆய்வறிக்கை:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் செயலிழந்து இலங்கை தரையில் நீடித்த நிலையில், இன்று அதிகாலை மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதி குமரி கடல் பகுதியில் இறங்கிய போது தீவிர தாழ்வு பகுதியானது சாதாரண தாழ்வு பகுதியாக செயல் இழந்தது.

தாழ்வு பகுதியாக குமரி முனைக்கு தெற்கே கன்னியாகுமரியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் குமரி கடலில் அரபிக் கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது

இது செயலிழந்த காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை பொழிவு பின்னடைவை கொடுத்தது. இருந்த போதிலும் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை இருந்தது .புதுச்சேரி கடலூர் பெரம்பலூர் திருச்சி வடக்கு ஈரோடு கோயபுத்தூர் திருப்பூர் தேனி விருதுநகர் மேற்கு தென்காசி மேற்கு திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி தெற்கு பகுதிகளில் மழை பொழிந்தது.

டிசம்பர் 26 இரவு வரக்கூடிய மணி நேரங்களில் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி விருதுநகர் தேனி மதுரை திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் மலைப்பகுதி திருப்பூர் கோயமுத்தூர் மாவட்ட கேரள எல்லையோர் பகுதி மற்றும் நீலகிரி மாவட்டம் ஆங்காங்கே ஆங்காங்கே மழை பொழிவு இருக்கும்.

டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை டெல்டா மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே வெயில் வந்த பிறகு வெப்பம் உயர்ந்த பிறகு மதியம் மாலை இரவு நேரங்களில் மழை பொழிவு காணப்படும். பரவலாக பெய்ய வாய்ப்பில்லை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி பெய்யும்.

வட உள் மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு.

டிசம்பர் 28 புதன் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை இருக்கும்.

டிசம்பர் 28 க்கு பிறகு பகலில் வறண்ட வானிலையும் இரவில் பனிப்பொழிவு காணப்படும்.

டிசம்பர் 28 முதல் மழை இல்லாத நாட்களை எதிர்நோக்கி இருக்கக்கூடிய விவசாய பணிகளை தொடங்கலாம்.

பூச்சி விரட்டி அடித்தல், விதைப்பு செய்தல், உப்பு உற்பத்தி பணி தொடங்குதல், அறுவடை செய்தல் போன்ற பணியை தொடங்கலாம்.

*ஆனால் ஜனவரி 5 இல் இருந்து இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரம் மேகமூட்டங்கள் உருவாகும். குழப்பமான வானிலையை கொடுக்கும். ஜனவரி 8க்குள் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஜனவரி 5 ,6,7, 8 இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் கடலோரம் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தூறலாம் .

ஜனவரி 8 இல் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய நிகழ்வு இலங்கை வரை வருவது உறுதியாக தெரிகிறது. வட இலங்கைக்கு எந்த அளவிற்கு மழை கொடுக்கும். உயர் அழுத்தம் தமிழகத்தை எட்டிப் பிடிக்க எந்த அளவிற்கு வழிவிடும். கடலோரம் மட்டும் எட்டிப் பிடிக்குமா? உள்ளேயும் மழை கொடுக்குமா? வட துருவ குளிரலை வரத்து அதன் இடையூறு போன்றவை ஆய்வில் உள்ளது. ஜனவரி 8 க்கு மேல் வரக்கூடிய நிகழ்வு தீவிர ஆய்வில் உள்ளது. ஜனவரி 1,2, தேதிகளில் உறுதிப்படுத்தலாம்

ந. செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *