அடுத்த அமைவின் அமைவிடம் எது? மழை எங்கே?

30.12.2022 அதிகாலை ஆய்வறிக்கை.

அடுத்த நிகழ்வு காற்று சுழற்சியாக சுமத்திரா தீவு மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் உருவாகி இருக்கிறது.

இந்த காற்று சுழற்சி போராடி பொங்கல் வரை தமிழகத்தை நெருங்கும்.

இதன் காரணமாக ஜனவரி 5க்கு மேல் டெல்டா கடலோரம் தென்கடலோரம் குழப்பமான வானிலை மேகமூட்டம் ஆங்காங்கே தூறல் இருக்கும்.

ஜனவரி 5 முதல் இலங்கையில் ஆங்காங்கே நனைக்கும் மழை காணப்படும்.

ஜனவரி 8ககு மேல் 14 க்குள் இலங்கை நெருங்கக்கூடிய தாழ்வு அமைவு தமிழகத்திற்குள் எந்த அளவிற்கு முன்னேறி மழை பொழிவை கொடுக்கும் என்பது ஆய்வில் உள்ளது.

வட துருவத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைந்த அழுத்த பனிப்புயல் வட துருவ நாடுகள் அனைத்தையும் பாதிப்படையை செய்திருக்கிறது. குறிப்பாக கனடா அமெரிக்கா ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் வடகொரியா தென்கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத குளிர் காற்று வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக மாதக்கணக்கில் அனைத்தும் முடங்கி இருக்கிறது.

இந்த குளிர் காற்று தான் பசிபிக் பெருங்கடல் தென் சீனக்கடல் தாய்லாந்து வளைகுடா வழியாக தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா வரை பயணிக்கிறது.

இந்தக் குளிர் காற்று வங்கக்கடலிலும் இந்த ஆண்டு இரண்டு முறை நுழைந்து மழை பொழிவின் வழக்கமானகுணத்தையும் தீவிர தன்மையையும் நகர்வையும் மாற்றி அமைத்தது.

இந்த நிலை தொடர்கிற காரணத்தால் 2023 ஜனவரி 8 முதல் 14 வரை எதிர்ப்பார்க்கும் நிகழ்வையும், ஜனவரி 16 முதல் 24 வரை எதிர்பார்க்கும் நிகழ்வையும் தீவிர ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

2023 ஜனவரி 8 முதல் 14 வரை இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் தென் கிழக்கு பகுதிக்கு நிகழ்வு வரும்.

2023 ஜனவரி 16 முதல் 24 வரை இடைப்பட்ட காலத்தில் தென் இலங்கை குமரிக்கடல் மாலத்தீவு பகுதிக்கு நிகழ்வு வர வாய்ப்பு இருக்கிறது.

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் நெருங்குவது உறுதி அது தமிழகத்திற்கும் இலங்கைக்கும் மழை பொழிவை எந்த அளவிற்கு கொடுக்கும் .எந்த அளவிற்கு முன்னேறும் என்பதை வரக்கூடிய நாள்களில் உறுதிப்படுத்தலாம்.

நம்முடைய துல்லிய வானிலை (அதிகாலை இரவு இரு நேரங்கள்) அறிக்கையை ஆண்டு முழுவதும் பார்த்து திட்டமிட்ட துல்லிய வேளாண்மை செய்து லாபம் அடையுங்கள்.
ந. செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *