ஜனவரி இறுதி தாழ்வு பகுதி.மழை எப்படி?

2023 ஜனவரி 26 அதிகாலை ஆய்வறிக்கை

இனிய குடியரசு தினத்தில் வணங்கி மகிழ்கிறேன்.

ஜனவரி 26
ஜன 26 கேரள எல்லையோர தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மீது மட்டும் மழைக்கு வாய்ப்பு. பிற மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு குறைவு.
வானம் மேகம் சூழ்ந்து காணப்படும் ஒரு சில இடங்களில் தூறல் காணப்படலாம்.

ஜனவரி 27 க்கு மேல்
ஜனவரி 27 க்கு மேல் தீவிரமடைந்து இலங்கையை நெருங்கி வரும் என்பதால் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான நனைக்கும் மழைக்கு வாய்ப்பு.
தென் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ,வட கடலோர மாவட்டங்கள் மிதமானது வாய்ப்பு தெரிகிறது.

ஜனவரி 27 முதல் மெல்ல படிப்படியாக மழை அதிகரித்து ஜனவரி 30 31 தேதிகளில் பரவலான மழை தெரிகிறது.அம்மழைக்கு பிறகு இரண்டு நாள் இடைவெளி கிடைக்கும்.
மீண்டும் அடுத்த சுற்று மழைப்பொழிவு பிப்ரவரி முதல் வாரத்தில் இருக்கிறது.
அறுவடை செய்தபின் வைக்கோல் சேமிப்பதில் உலர்த்துவதில் இடையூறு செய்ய வாய்ப்பிருக்கிறது.
அறுவடை நாளை குறிப்பதில் குழப்பம் தொடர்ந்து நீடிக்கும். மழை பொழிவு தொடர்ந்து பெய்யாது. மழை குறிக்கீடு இருக்கும் .குழப்பம் அதிகம் இருக்கும்.

பிப்ரவரி மார்ச் மழை

வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது அவ்வப்பொழுது மழை கொடுக்கும்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
26.1.2023 -4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *