இன்று கனமழை எங்கே?அடுத்தது வார காலம் அடைமழை கொடுக்க ஆயத்தம்.

2022 டிசம்பர் 14 அதிகாலை ஆய்வறிக்கை:

மான்டோஸின் செயலிழந்த பகுதி காற்று சுழற்சியாக கர்நாடகாவின் மங்களூரு கேரளாவில் கோழிக்கோடு மற்றும் லட்சத்தீவு இடைப்பட்ட பகுதியில் அரபிக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரமடைந்து நீடிக்கிறது. டிசம்பர் 13 14 தேதிகளில் லட்சத்தீவு பகுதியை விட்டு விலகி தாழ்மண்டலமாக தீவிரமடைந்து ஆப்பிரிக்க பகுதியை நோக்கி விலகி செல்லும்.
இதன் காரணமாக தமிழக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வழியாக மேற்கு காற்று நுழைய, தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக கிழக்கு காற்று ஈர்க்கப்பட தமிழகத்தின் கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தென்காசி ,தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி ,திண்டுக்கல், திருப்பூர் ,கோயம்புத்தூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 14 மதியம் மாலை இரவு நேரங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பொழியும்.

சிவகங்கை புதுக்கோட்டை ஈரோடு கரூர் திருச்சி தெற்கு ஆகிய பகுதிகளிலும் இன்று டிசம்பர் 14 மதியம் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்கள் வடகடலோர மாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் ஆகிய பகுதிகள் அடங்கிய ஓரிரு இடங்களில் லேசான மழை பொழியலாம். பரவலான மழைக்கு வாய்ப்பில்லை.

கிழக்கு வடகிழக்கு காற்று தமிழகம் தரை ஏற , நீராவியை வேகமாக மாற்ற சாதக காற்று டெல்டா வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் இல்லாத காரணத்தால் காற்று குளிர்ந்து மேகமாக மாறாமல் பனியாக படுகிறது. வெயில் வந்ததும் மேகம் உருவாகி ஒரு சில இடங்களில் தூறலாம்.

டிசம்பர் 15, 16,17 இடைவெளி கிடைக்கும். டிசம்பர் 15 16 ,17 தேதிகளில் இடைவெளி கொடுத்தாலும் நல்ல வெயில் காணப்பட்டாலும் மேற்கு தொடர்ச்சி மலை தென் மாவட்டங்களில் மேற்கு பகுதியில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கிழக்கு காற்று வருகை காரணமாக நனைக்கும் மழைக்கு வாய்ப்பு தெரிகிறது. உலர்த்துபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் போதும். டிசம்பர் 15 16 17 பெரும்பாலும் மழை இல்லாத வானிலை ,இரவில் பனிப்பொழிவும் காணப்படும்.

டிசம்பர் 13 தெற்குஅந்தமான் கடற் பகுதிக்கு வந்த தென் சீனக் கடல் காற்று சுழற்சி, தற்பொழுது சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக தீவிரமடைந்துள்ளது. மேலும் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி டிசம்பர் 17ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்று இலங்கையை தொட்டு டிசம்பர் 18 டெல்டா மாவட்ட கரையை நெருங்கி வந்து வட இலங்கை மற்றும் டெல்டா மாவட்டங்கள் இடைப்பட்ட பகுதிக்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கன மிக கனமழையை கொடுப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

டிசம்பர் 18 முதல் 24 வரை நிறைய மழைப்பொழிவு கொடுக்க அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கவுள்ள பள்ளிகளின் இரண்டாம் பருவத் தேர்வுக்கு இடையூறு கொடுக்கும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் ஒட்டுமொத்த அனைத்து தமிழக மாவட்டங்கள்,ஆந்திர பிரதேசம் ,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி காரைக்கால் மாஹி, ஏனாம் ஆகிய பகுதிக்கும் நல்ல மழை பொழிவு கொடுக்கும்.
டிசம்பர் 18க்குள் அடுத்த மழை தொடங்கி கிறிஸ்மஸ்க்கு ஒரு இடைவெளி கொடுத்து டிசம்பர் இறுதியில் தாண்டி ஜனவரி 3 வரை மழைப்பொழிவு உறுதியாக தெரிகிறது.

டிசம்பர் 18 வட இலங்கை வரும் தாழ்வு பகுதி அல்லது தீவிர தாழ்வு பகுதி டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் வழியாக டிசம்பர் 21வரை மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 22,23,24 இல் அரபிக் கடலில் இறங்கி கிழக்கு காற்றை ஈர்த்தும், தமிழக கரையோரம் மேலும் ஒரு காற்று சுழற்சி நீடிக்க டிசம்பர் 24 வரை மழை பொழிவை கொடுக்கும். டிசம்பர் 24 க்கு முன் ஒரு காற்று சுழற்சி அமைந்து கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் வரை மழை பொழிவை கொடுக்கும். கிறிஸ்மஸ்க்கு இடைவெளி கொடுத்து கிறிஸ்மஸுக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தீவிர நிகழ்வு தமிழகம் நெருங்கி டிசம்பர் 28 29 30 31 ஜனவரி 1,2,3 தீவிர நிகழ்வால் மழைப்பொழிவு கொடுக்கும்.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மழை இடைவெளி வாய்ப்பு தெரிகிறது, தற்பொழுது வருவது தாமதம் அடைவதால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தென் மாவட்டங்களில் மழை பொழிவை கொடுக்கும் என்று தெரிகிறது.
இப்படி பொங்கலுக்கு முன் ஒரு நிகழ்வும் பொங்கலுக்கு பின் ஒரு நிகழ்வும் என ஜனவரி 20 வரை நிகழ்வுகளால் வடகிழக்கு பருவமழை தொடரும்.


நல்ல மழைப்பொழிவு இருக்கிறது, வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .
அனைத்து ஏரி குளங்களும் நிரம்பும் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பொழிய காத்திருக்கிறது. கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும். பல மாவட்டங்களில் சராசரிக்கு மிகவும் கூடுதல் மழையும், மேலும் பல மாவட்டங்களில் சராசரிக்கு கூடுதல மழையும், சில மாவட்டங்களில் சராசரி மழை என்ற நிலையை அடையும். குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்யுங்கள்.

விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *