இலங்கை கடந்து மன்னார் வளைகுடா குமரிக்கடல் வரும் நிகழ்வு எங்கே? மழை எப்போது?

2022 டிசம்பர் 20 இரவு 7 மணி ஆய்வறிக்கை:

நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் மற்றும் சுமத்திரா தீவு இடைப்பட்ட பகுதிகளில் உருவான தாழ்வுப்பகுதி இலங்கையை நெருங்கி வந்த நிலையில் சற்று விலகி நிற்கிறது அந்தமான் பகுதி காற்று சுழற்சியுடன் இணைந்து நீள் வட்ட பகுதியாக மாறி நீடிக்கிறது.
டிசம்பர் 21 22 23 ஆகிய தேதிகளில் இந்த நிகழ்வு சற்று விலகியே இருக்கும். இதன் காரணமாக மயிலாடுதுறை, காரைக்கால்,நாகப்பட்டினம் திருவாரூர் , தஞ்சாவூர் மாவட்ட தெற்கு பகுதி, புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதி, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி, தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை இருக்கும்.

டிசம்பர் 24 சனிக்கிழமை மீண்டும் இலங்கையை நெருங்கி வரும்.டிசம்பர் 25 பிற்பகல் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடந்து, மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதியை டிசம்பர் 26 அடைந்து தாழ்வு மண்டலமாக தீவிரமடையும், இது டிசம்பர் 27 குமரிக்கடல் பகுதியில் மேற்கு நோக்கி பயணித்து டிசம்பர் 28 லட்சத்தீவு பகுதியை சென்றடையும்.

தென் அரைக்கோள புயலுக்கு வடதுருவக் குளிரலை வர, இலங்கை நெருங்கும் தாழ்வுப்பகுதி வட துருவ குளியலையை தன் பக்கம் ஈர்த்து திருப்பி அனுப்பும் கட்டுப்பாட்டாளராக அமைந்துள்ளது.

இதனால் இலங்கை அருகே நீடிக்கும் தாழ்வு பகுதிக்கு வட துருவ குளிரலை மட்டுமே கிடைக்கிறது.

நெருங்கி வரும் பொழுது கடலோர மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் ஓரளவிற்கு வெப்பநீர் ஆவி கிடைக்கும். இதனால் கடலோர மாவட்டங்களில் கடலோர பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் நல்ல மழை பொழிவை பெறும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிவு பெறும்.

டிசம்பர் 24க்கு பிறகு உள் மாவட்டங்களில் பகல் வெப்பம் உயரும் பொழுது ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மழை பொழிவு கொடுக்கும்.

இந்த நிகழ்வு டிசம்பர் 25 பிற்பகல் முதல் டிசம்பர் 28 முடிய இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா பகுதி மற்றும் குமரிக்கடலை அடையும் பொழுது லேசான காற்றுடன் கடலோர மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருக்கும்.

உள் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மலை பகுதிகளில் கணவாய் பகுதிகளில் மிதமான காற்று கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி பயணிக்கும். அதே நேரத்தில் மழை மாவட்டங்களில் மிதமான மழை பொழிவும் இருக்கும்.

டிசம்பர் 26 27 குமரி கடலில் மேற்கு நோக்கி பயணிக்கும் என்பதால் தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி கடலோரம், திருநெல்வேலி கடலோரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை வாய்ப்பு தெரிகிறது.

ஒக்கி புயல் போல இலங்கை கடந்து குமரி முனைக்கு தெற்கு புறமாக லட்சத்தீவு பகுதியை நோக்கி பயணிக்கும். ஆனால் இது இப்பொழுது வரை தாழ்வு மண்டலம் வரை மட்டுமே தீவிரமடையும் என்று தெரிகிறது.

டிசம்பர் 28 லட்சத்தீவு பகுதிக்கு சென்று கிழக்கு காற்றை ஈர்க்கும் என்பதால் டிசம்பர் 29 30 31 தேதிகளில் தமிழகத்தில் ஆங்காங்கே மதிய மாலை இரவு மழை வாய்ப்பு தெரிகிறது.

கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் மன்னர் வளைகுடா, குமரி கடல் ,தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும் டிசம்பர் 26 27 28 தேதிகளில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ந.செல்வகுமார்.

தமிழ்நாடு வானிலை: மழை மூன்று பாகங்களில் அச்சுறுத்தல்

குளிர்கால வடகிழக்கு பருவமழை பொங்கலுக்கும் பொழிய வாய்ப்பு.

25.11.2024-4AM வெளியீடு.காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி அமையும்.

2024 நவம்பர் 11 திங்கள் இரவு முதல் டிசம்பர் 31 முடிய வானிலை எதிர்பார்ப்பு

2024 நவம்பர் 11 முதல் டிசம்பர் 31 முடிய வானிலை எதிர்பார்ப்பு

2024 நவம்பர் 10  முதல் டிசம்பர் 31 முடிய வானிலை எதிர்பார்ப்பு.

14.10.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு

08.10.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு

3.10.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©2025 SELVAKUMAR WEATHER WordPress Video Theme by WPEnjoy