வரும் நாள்கள் வானிலை எப்படி? மழை வாய்ப்பு எங்கே?

04.01.2023 புதன் அதிகாலை ஆய்வறிக்கை.

காற்று சுழற்சி மெல்ல மேற்கு நோக்கி நகரத் தொடங்கி இருந்த நிலையில் ஆஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் வட துருவ குளிரலையில் சிக்கி நகர்வதில் வேகம் குறைந்தும், தீவிரமடைய முடியாமலும் நீடிக்கிறது.

இதன் காரணமாக ஜனவரி 5 முதல் கிழக்கு காற்று தமிழகத்தில் நுழைந்து ஜனவரி 5 முதல் குளிர் பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டத்துடன் வானிலையை உருவாக்கும்.

ஜனவரி 5 முதல் 9 முடிய இடைப்பட்ட நாள்களில் அவ்வப்பொழுது சில நிமிடங்கள் டெல்டா கடலோரம் (கடற்கரை ஓர கிராமங்கள் மட்டும் உறுதி) தென்கடலோரம் தூறல் நனைக்கும் மழையை கொடுப்பதற்கு வாய்ப்பு.

பசிபிக் பெருங்கடலின் நிகழ்வு ஜனவரி 8,9 தேதிகளில் அந்தமான் கடற்பகுதிக்கு வந்து ஜனவரி 11 12 13 தேதிகளில் இலங்கைக்கு மழை கொடுக்கும் வகையில் அமைந்து அவ்வப்பொழுது சில நிமிடங்கள் டெல்டா கடலோரம் (கடற்கரை ஓர கிராமங்கள் மட்டும் உறுதி) தென்கடலோரம் தூறல் நனைக்கும் மழையை கொடுப்பதற்கு வாய்ப்பு.

இந்த காற்று சுழற்சி போராடி பொங்கல் வரை தமிழகத்தை நெருங்கும்.

இதன் காரணமாக ஜனவரி 11 க்கு மேல் டெல்டா கடலோரம் தென்கடலோரம் குழப்பமான வானிலை மேகமூட்டம் இருக்கும்.

ஜனவரி 5 முதல் இலங்கையில் ஆங்காங்கே மழை காணப்படும்.

குளிர் காற்று தான் பசிபிக் பெருங்கடல் தென் சீனக்கடல் தாய்லாந்து வளைகுடா வழியாக தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா வரை பயணிக்கிறது.

இந்தக் குளிர் காற்று வங்கக்கடலிலும் இந்த ஆண்டு இரண்டு முறை நுழைந்து மழை பொழிவின் வழக்கமானகுணத்தையும் தீவிர தன்மையையும் நகர்வையும் மாற்றி அமைத்தது.

ஜனவரி 16 முதல் 24 வரை இடைப்பட்ட காலத்தில் தென் இலங்கை பகுதிக்கு நிகழ்வு வர வாய்ப்பு.

மேற்கண்ட நிகழ்வு இலங்கை நெருங்குவது உறுதி அது தமிழகத்திற்கு மழை பொழிவை எந்த அளவிற்கு கொடுக்கும் .எந்த அளவிற்கு முன்னேறும் என்பதை வரக்கூடிய நாள்களில் உறுதிப்படுத்தலாம்.

நம்முடைய துல்லிய வானிலை (அதிகாலை இரவு இரு நேரங்கள்) அறிக்கையை ஆண்டு முழுவதும் பார்த்து திட்டமிட்ட துல்லிய வேளாண்மை செய்து லாபம் அடையுங்கள்.

ந. செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *