இம்மாதம் இறுதி வரை இதே வானிலை. மழை எங்கே?

06.01.2023 வெள்ளிக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை.

காற்று சுழற்சி தொடர்ந்து மிகவும் மெல்ல நிலநடுக்கோட்டுப் பகுதியை ஒட்டி மேற்கு நோக்கி நகர்கிறது.

ஜனவரி 3 வேதாரண்யம் தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் ஆங்காங்கே மழை கொடுத்தது.

ஜனவரி 4 சென்னை மாநகரில் ஆங்காங்கே ஆங்காங்கே நனைக்கும் மழை கொடுத்தது.

ஜனவரி 5 விழுப்புரம் கள்ளக்குறிச்சி புதுச்சேரி கடலூர் திருவண்ணாமலை செங்கல்பட்டு தர்மபுரி சேலம் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே தூறல் நனைக்கும் மழையை பொழிவை கொடுத்தது.சென்னை தாம்பரம் பொழிச்சலூர் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மிதமான மழைப்பொழிவு வரை கொடுத்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே தூறல் நனைக்கும் மழை கொடுத்த நிலையில் ஒட்டு மொத்தமாக மேகம் சூழ்ந்து காணப்பட்டது
செம்போடை பகுதிகளில் தூறல் சாரல் கொடுத்தது.

இந்த காற்று சுழற்சி நிலநடுக்கோட்டு பகுதியில் மேற்கு நோக்கி நகருகிற காரணத்தால் ஜனவரி 5 முதல் கிழக்கு காற்று தமிழகத்தில் நுழைந்து ஜனவரி 5 முதல் குளிர் பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டத்துடன் வானிலையை உருவாக்கும்.

ஜனவரி 6 7 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கிழக்கு காற்று வலுவாக நுழையும். குறிப்பாக ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் மிகவும் வலுவான கிழக்கு வடகிழக்கு காற்று நுழையும். இக்காற்று கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு பகுதி, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் ஒன்றிய பகுதி, தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதி வலுவான காற்று விட்டு விட்டு வீசும். ஆரல்வாய்மொழி நாங்குநேரி பணகுடி மாஞ்சோலை நாலுமூக்கு போன்ற பகுதிகளில் வலுவான காற்று வடகிழக்கு திசையில் இருந்து விட்டு விட்டு வீசும். கடும் மேகம் சூழ்ந்து ,கடும் குளிர் ,அவ்வப்பொழுது நனைக்கும் மழை கொடுக்கும்.

ஜனவரி 6,7 பகல் நேரங்களில் டெல்டா மாவட்டங்கள் கடலோரம் தென் மாவட்டங்கள் கடலோரம் தூறல் நனைக்கும் மழை கூடுதல் வாய்ப்பு.

ஜனவரி 9 முடிய அவ்வப்பொழுது சில நிமிடங்கள் டெல்டா கடலோரம் (கடற்கரை ஓர கிராமங்கள் மட்டும் உறுதி) தென்கடலோரம் தூறல் நனைக்கும் மழையை கொடுப்பதற்கு வாய்ப்பு.

அடுத்த நிகழ்வு:

தென் சீனக்கடல் நிகழ்வு ஜனவரி 11 12 13 ,14 ,15 தேதிகளில் இலங்கைக்கு மழை கொடுக்கும் வகையில் நிலநடுக்கோட்டு பகுதியில் அமைந்து அவ்வப்பொழுது சில நிமிடங்கள் டெல்டா கடலோரம் (கடற்கரை ஓர கிராமங்கள் மட்டும் உறுதி) தென்கடலோரம் தூறல் நனைக்கும் மழையை கொடுப்பதற்கு வாய்ப்பு.

அதற்கடுத்த நிகழ்வு:

ஜனவரி 17முதல் 24 வரை இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் தெற்கே நிகழ்வு வர வாய்ப்பு.

மேற்கண்ட நிகழ்வுகள் இலங்கை தெற்கே நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு வருவது உறுதி . அது தமிழகத்திற்கு தூறல் மழை பொழிவை எந்த அளவிற்கு முன்னேறி கொடுக்கும் என்பதை வரக்கூடிய நாள்களில் உறுதிப்படுத்தலாம்.

மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை

ஜனவரி 6,7,8 மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் வலுவான காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வரை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி கிழக்கு கடல் கடல் பகுதியிலும் , மன்னார்வளகுடா,குமரிக்கடல் பகுதியிலும் இறங்க வேண்டாம். தமிழகத்தின் பிற மாவட்ட கடலோரப் பகுதிகளில் எடை குறைந்த படகுகளுக்கு சவால் நிறைந்த காற்று இருக்கும்.
எச்சரிக்கையுடன் மீன் பிடித்தல் நலம்.
ஜனவரி 6,7 கண்டிப்பாக மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதியில் வலுவான காற்று இருக்கும்.

நம்முடைய துல்லிய வானிலை (அதிகாலை இரவு இரு நேரங்கள்) அறிக்கையை ஆண்டு முழுவதும் பார்த்து திட்டமிட்ட துல்லிய வேளாண்மை செய்து லாபம் அடையுங்கள்.

அமெரிக்கா ,சவுதி அரேபியா , பஹரைன், கத்தார் பகுதிகளில் நாம் எதிர்பார்த்தது போல் கடும் உறை பனிக்கு பின் கனமழை அமைந்துள்ளது. கடந்த வாரம் கொடுத்த முன்னறிவிப்பை நினைவு கூர்ந்து பார்க்கவும்.

ந. செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *