வானிலை எப்படி?இடிமழை எங்கே? எப்போது?நிகழ்வு எப்போது?

2023 ஏப்ரல் 17 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை

இன்று சூரியனின் குத்துக்கதிர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு க்கு இடைப்பட்ட பகுதி, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை மற்றும் பெரியப்பட்டிக்கு இடைப்பட்ட பகுதி , திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி திண்டுக்கல்லுக்கு வடக்கே உள்ள பகுதிகள் , கரூர் மாவட்டத்தில் தெற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகருக்கு தெற்கே உள்ள பகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுக்கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி, திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டைக்கு வடக்கு, திருவாரூர் நீடாமங்கலத்திற்கு தெற்கே உள்ள இடைப்பட்ட பகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகட்டூர் வேதாரணியம் தொகுதிக்கு வடக்கே கீழ்வேளூர் சிக்கல் நாகூர் பகுதிக்கு தெற்கே உள்ள இடைப்பட்ட பகுதிகளிலும் நண்பகலில் விழும், சரியாக 12 மணி 12 நிமிடத்திற்கு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பொருளின் நிழல் அதன் மீதே விழுந்து விடும்.

இப்படி சூரியனின் குத்து கதிர் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து ஏப்ரல் 24,25 ஆம் தேதியில் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களில் விழும்.

ஏப்ரல் 17 முதல் 20 வரை
ஏப்ரல் 17 க்கு மேல் , மேலும் வெப்பம் புழுக்கம் அதிகரிக்கும், உயர் அழுத்தம் காரணமாக தெளிவான வானமும் வறண்ட வானிலையும் கடும் வெப்பமும் நிலவும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

ஏப்ரல் மே கோடை மழை
சூரியனின் குத்துக்கதிர் வட தமிழ்நாட்டில் ஏப்ரல் 20க்கு மேல் 26 வரை நிலவும் என்பதால் தெற்கு காற்று, தென்கிழக்கு காற்று, கிழக்கு காற்று தமிழ்நாட்டின் கேரளா கர்நாடகா ஆந்திரா எல்லையோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் காற்று குவியும் என்பதால் ஏப்ரல் 20 க்கு மேல் கர்நாடகா கேரளா ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் உள்ள மாவட்டங்கள் மாலை இரவு மழை சாதகம் தெரிகிறது.

ஏப்ரல் 20 க்கு மேல் மாலை இரவு மழை பொழிந்தாலும் கடும் வெயில் வாட்டி கடும் கொடுக்கும் கொடுத்து பிறகு தான் மழை பொழிவை கொடுக்கும்.

மே மாதம் கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா 6?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
17.4.2023-4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *