தாழ்வு மண்டலம் வருகை.ஜன் 30 முதல் பிப் 4 முடிய மழை தீவிரம் எப்படி?

2023 ஜனவரி 29 ஞாயிறு அதிகாலை ஆய்வறிக்கை

இலங்கை நெருங்கும் தாழ்வு மண்டலம் ஆய்வறிக்கைளுடன் இணைந்தே இருந்து அறுவடைக்குக்கும் பிற பணிக்கும் திட்டமிடவும்

வங்கக்கடல் வந்தடைந்தது நிலநடுக்கோட்டு தாழ்வுப்பகுதி , தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு மத்திய வங்கக்கடல் இடைப்பட்ட பகுதியில் ,இலங்கை மற்றும் அந்தமான் இடைப்பட்ட பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இன்று நன்கு அமைந்த தாழ்வு பகுதியாகவும், வரும் நாளில் தாழ்வு மண்டலமாகவும் மாறி பிப்ரவரி 1 இலங்கை அருகே வந்தடையும்..

ஜனவரி 29

திருவள்ளூர் , சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் புதுச்சேரி மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் காலைக்கு மேல் கருமேகம் சூழ்ந்து ஆங்காங்கே தூறல் இருக்கலாம்.
ஜனவரி 29 மாலை இரவு அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே தூறல் மழை தொடங்கி, நள்ளிரவில் கடலோரத்தில் நனைக்கும் மழையாக மாற வாய்ப்பு.

ஜனவரி 30 31 பிப்ரவரி 1,2,3 வானிலை

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நனைக்கும் மழை முதல் மிதமான மழை பொழிவு வரை இருக்கும்.
ஜனவரி 30 மதியம் , மாலை பரவலான மழை பொழிவாக மாறும்.
டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் சற்று கனமழை முதல் ஓரிரு இடங்களில் கனமழை பொழிவு வரை இருக்கும்.

மத்திய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்கள் பரவலான மழை வாய்ப்பு.

ஜனவரி 30, 31 பிப்ரவரி 1 ,2 ,3ஆகிய தேதிகளில் ஆங்காங்கே அனைத்து மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்பு.

அறுவடை விவசாயிகளுக்கு ஆலோசனை
முதிர்ந்த , அறுவடைக்கு பக்குவம் அடைந்த தானியங்களை ஜனவரி 29 க்குள் அறுவடை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

அறுவடைக்கு ஜனவரி 30 31 பிப்ரவரி 1 2 3 தேதிகளில் நாள் குறிக்க வேண்டாம்.
ஜனவரி 30 மதியத்திற்கு மேல் மழை பொழிவிற்கு சாதக சூழல் தெரிகிறது.

அச்சம் பீதி வேண்டாம்

கடந்த வாரம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதிகளில் எதிர்பார்ப்பை விட கூடுதல் மழை பொழிந்து அறுவடை வயல்களில் இன்னும் நீர் தேங்கி உள்ளது.

அதே போல் அகஸ்தியன்பள்ளி கடிநெல்வயல்
பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்க பட்டது.

அப்பொழுது அவர்கள் முன்னெச்சரிக்கை எடுக்காததால் வேதனை அடைந்தார்கள்.

வரக்கூடிய ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை நல்ல மழை பொழிவு தெரிகிறது.

மண்டலமாவது உறுதி.
இலங்கையை நெருங்குவது உறுதி.
டெல்டா தென் மாவட்டங்கள் மழை உறுதி.
தெற்கு டெல்டா தென்கடலோர மாவட்டங்கள் சற்று கனமழை வரை உறுதி.
தென் மாவட்டங்கள் டெல்டாவின் பிற வடக்கு
பகுதிகள், தென் மாவட்டங்களில் பிற பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மிதமானது முதல் சற்று கனமழை உறுதி.
வடகடலோரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் வடக்கு பகுதி மத்திய உள் மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழைப்பொழிவு இருக்கும்.
கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் வடக்கு உள் மாவட்டங்கள் ஓரிரு நாள் ஆங்காங்கே லேசான மிதமான மழைப்பொழிவு இருக்கும்.

குளிர் காற்று இணைவு சதவீதம், வெப்ப நீராவி இணைவு சதவீதம், மண்டலத்தின் தீவிரத் தன்மை, இலங்கை நெருங்கி வந்து அமையும் இடம் பொறுத்து மழை பொழிவின் கூடுதல் குறைவு ஏற்படலாம். இவை அனைத்தும் தொடர்ந்து ஆய்வில் உள்ளது.
உங்கள் ஊருக்கு
சாதாரண மிதமான மழையா?
சற்று கனமழையா!
கன மழையா?
அதன் குணம் எப்படி?
ஆய்வறிக்கையுடன் இணைந்தே இருந்து திட்டமிட்ட வேளாண் பணி செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பிப்ரவரி மார்ச் மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது அவ்வப்பொழுது மழை கொடுக்கும்.

பிப்ரவரி 4 க்கு சற்று இடைவெளி கிடைக்கும்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
29.1.2023 -4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *