வரும் நாள்கள்
வானிலை எப்படி,?
6.2.2023-4AM வெளியீடு.

2023 பிப்ரவரி 6 அதிகாலை ஆய்வறிக்கை

வானிலை அமைப்பு

இலங்கையை கடந்து தெற்கு புறமாக சென்ற காற்று சுழற்சியும் புதிய காற்று சுழற்சியும் இணைப்பு சுழற்சி இணைக்க ஒன்றிணைந்து கொண்டிருக்கிறது.
ஒன்றிணைந்த காற்று சுழற்சி பிப்ரவரி 7 8 9 தேதிகளில் இலங்கைக்கு தெற்கு புறம் நிலநடுக்கோட்டு பகுதியில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 6 வானிலை

தெளிவான வானம் காணப்படும். ஓரளவு சுடும் வெயில் இருக்கும்.
மிதமான வெயில் பயன்படுத்தி அறுவடை தானியங்களை அறுவடைக்கு உலர்த்தி பக்குவப்படுத்துங்கள் பிறகு அறுவடை செய்து மீட்டெடுக்க திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

பிப்ரவரி 7,8,9 வானிலை

வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது மழை வாய்ப்பு அமையலாம், பிப்ரவரி இறுதி நாள் மற்றும் மார்ச் மத்தியில் தெரிகிறது.

அதன் அடிப்படையில் பிப்ரவரி 7,8,9 தேதியில் மேலும் ஒரு காற்று சுழற்சி தெற்கு புறம் நிலநடுக்கோட்டு பகுதியில் நகரும் என்பதால் பிப்ரவரி 7 8 9 தேதிகளில் டெல்டாவின் கடலோரப் பகுதிகளுக்கு குழப்பும் மேகமூட்டம் வானிலையை பகல் நேரங்களில் கொடுக்கும்.

மழைக்கு வாய்ப்பு இல்லை.குழப்பும் வானிலை மட்டும் .
நீங்கள் குழம்பாமல் அச்சமடையாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஆகும்.

பிப்ரவரி 7,8,9 திருநெல்வேலி,தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் கடலோர வானிலை:
பிப்ரவரி 7 8 9 தேதிகளில் இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டுக்கு வரும் காற்று சுழற்சி புதுக்கோட்டை கடலோரம் குழப்பும் வானிலையை கொடுக்கும்.மழைக்கு வாய்ப்பு இல்லை.

பிப்ரவரி 7 8 9 தேதிகளில் ராமேஸ்வரம் பகுதிக்கு நனைக்கும் மழை பொழிவை அவ்வப்பொழுது கொடுக்கும்.
ராமநாதபுரம் மாவட்ட பிற கடலோர பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் திருநெல்வேலி கடலோரப் பகுதிகளிலும் பிப்ரவரி 7 8 9 தேதிகளின் ஆங்காங்கே ஆங்காங்கே அவ்வப்பொழுது தூறல் ,நனைக்கும் மழைக்கு வாய்ப்பு.

பிப்ரவரி 10 முதல் 15 வரை வானிலை

பகலில் நல்ல வெயில், இரவில் பனிப்பொழிவு. பகலில் உலர்த்த சாதக சூழல் அமையும். அறுவடைக்கு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

பிப்ரவரி 15க்கு மேல் மீண்டும் குழப்பம் காற்று சுழற்சி

பிப்ரவரி 7 8 9 போல பிப்ரவரி 16 17 18 தேதிகளில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்தும் ஆய்வில் உள்ளது.

இலங்கைக்கான வானிலை அறிக்கை

தாழ்வு சுழற்சி இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் நீடிப்பதால் இலங்கையின் தெற்கு பகுதிக்கும் மழைப்பொழிவு உண்டு. பிப்ரவரி 5 இலங்கையின் தெற்கு பகுதியில் தென்கிழக்கு பகுதியில் மழை தொடரும். இலங்கையின் தெற்கு பகுதியிலும் இலங்கையில் பிப்ரவரி 6 மழை விலகும். இலங்கையில் பிப்ரவரி 6 முதல் உலர்ந்த பிறகு அறுவடை செய்யலாம்.

பிப்ரவரி 7 8 9 தேதிகளில் இலங்கையின் தெற்கு முக்கால் பகுதி பரவலான மழைக்கு வாய்ப்பு.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிப்ரவரி 7,8,9,10 தேதிகளில் தூறல் நனைக்கும் மழைக்கு வாய்ப்பு. ஓரிடங்களில் லேசான மழை பெய்யலாம்.பிப்ரவரி 10 க்கு மேல் பிப்ரவரி15 வரை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் இடைவெளி கிடைக்கும்.தென் இலங்கைக்கு ஆங்காங்கே மழை இருந்து கொண்டிருக்கும் இடையிடையே இடைவெளியும் இருக்கும்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்.ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
6.2.2023-4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *