கோடையில் ஒரு மழைக்காலம்.வானிலை வரலாற்றை திருத்தம் செய்ய தொடங்கியது

16.5.2024-4AM வானிலை தகவல் தொகுப்பு:

2024 கோடை மழையும் பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.

தலைப்பு செய்திகள்
(1) சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோரம் உட்பட கடலோரம் நள்ளிரவு முதல் மழை தொடங்கி தீவிரமாகியது. இம்மழை வட உள் மாவட்டங்கள் தொடங்கி அதனையும் தாண்டி திருப்பதி, சித்தூர், குப்பம், கோலார், நகரி,பெங்களூரு மைசூரு வரை தீவிரம் அடையும்.
மதியம் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தாண்டி கேரளா வரை தீவிரம் அடையும்.
(2) மே 16 முதல் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் காற்று சுழற்சி மழை தீவிரம் அடையும் என்பதால் பேசு பொருளாகும்.

(3)கோடை மழை இந்த காற்று சுழற்சியால் மே 22 வரை வழக்கமான கோடை மழையை விட மிகவும் கூடுதலாக பெய்து வரலாறு படைக்கும்.
அதனை தொடர்ந்து வரும் அடுத்த அந்தமான் தீவிர நிகழ்வால் மேலும் வலிமை பெறும்.
(4)அணைகள் நீர் வரத்து சற்று கூடும்.
(5)அந்தமான் நிகழ்வு புயலாவதற்கு எதிர் சுழற்சி எதிர்ப்பை விளைவிக்கிறது . சாதாரண தாழ்வு சுழற்சியாக தமிழ்நாடு கரைக்கு நெருக்கமாக உருவாகி வலிமையான தாழ்வு சுழற்சியாகி தமிழ்நாட்டின் காற்று சுழற்சியுடன் மேலடுக்கில் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு இணைந்து தீவிரமாகி நீடித்து விலகும்.
இதன் காரணமாக மே 19 முதல் 22 முடிய மழை தீவிரம் அடையும்.தென்மேற்கு பருவமழை போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமாக பொழியும். அது கன்னியாகுமரி மாவட்ட அணைகளை நிரப்பலாம். வால்பாறை கன்னியாகுமரி இடைப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி,விருதுநகர், தென்காசி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மேற்கு பகுதிகள் மிக கனமழையும் ஓரு சில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு. அப்போதும் தமிழ்நாடு கேரளா கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் நல்ல மழை பொழியும்.
(6)அந்தமான் நோக்கி விலகும் சுழற்சியால் மே 22 க்கு மேலும் மேற்கு காற்று வர நிறைய மழை, மிகவும் குளிர்ந்த சூழல் நிலவும்.
*
(7)மே இறுதியிலும் ஒரு காற்று சுழற்சி அமைந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை கோடை கனமழை தொடரும். இதனால் கோடை அனல், கோடை வெப்பம் விலகி கோடையே நிறைவடைந்தது எனலாம்.

மே 27 முதல் 31 முடிய எதிர்பார்ப்பு.

மே இறுதியில் தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.

தென்மேற்கு பருவமழை 2024

ஜூன் 1, 2 தேதிகளில் அரபிக்கடல் தாழ்வு பகுதியால் பருவ மழை தொடங்கும்.
அது புயலாகி மகாராஷ்டிரா அல்லது குஜராத் கடக்கும்.
அடுத்து ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரம் மேலும் ஒரு புயல் அரபிக்கடலில் உருவாகி கோவா, மகாராஷ்டிரா,கடக்க வாய்ப்பு.

ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், புயல் நெருங்கும் குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். *ஜூலை மாதம் வடக்கு கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா நல்ல மழை தெரிகிறது. கடலோர கர்நாடகா, கோவா, தெற்கு கடலோர மகாராஷ்டிரா புயல் அல்லது தாழ்வு பாதிக்கும் மழை தெரிகிறது ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,

மேட்டூர் நிலவரம்:

மே 15 இல் 18 TMC யாகவும்
*மே 24 வரை பெய்யும் மழையால் தொடக்கத்தில் வினாடிக்கு 1000 கன அடியாக இருக்கும் நீர் வரத்து மே 17,18,19,20,21,22 இல் 10,000 கன அடிவரை வரலாம். இதனால் குடி நீர் திறப்பு போக 4TMC கிடைக்கலாம். மே 18 இல் 17 TMC இருப்பை அடைந்து மே 31 இல் 20 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும்
உயர்ந்தலும் ஜூன் 12:இல் 20 TMC யாக இருக்கும்.
15 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.
குடிநீர் தேவை இருக்கும்.
ஜூன், ஜூலை அணைகளுக்கு நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.

டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஜூன், ஜூலை மாதங்களில் ஆறுகளில் பாசனத்திற்கு நீர் கிடைக்காவிட்டாலும் ஆங்காங்கே மழை இருக்கும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

இந்தியப் பெருங்கடல் IOD செப்டம்பர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.

பசிபிக்கடல் எல்-நினோ செப்டம்பர் மாத லா-நினா அமைப்பை அடையும்.

ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 செப்டம்பர் முதல் டிசம்பர் முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.

வடகிழக்கு பருவமழை.
அக் 20,21,22 இல் தொடங்கும்.
இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.

ந. செல்வகுமார்
16.5.2024-4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *