தீவிரமாகும்தீவிர தாழ்வு.கடப்பது எங்கே?

2022 டிசம்பர் 21 புதன்கிழமை இரவு 7 மணி ஆய்வறிக்கை

நன்கமைந்த தாழ்வு பகுதி இலங்கைக்கு கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இலங்கையை சற்று நெருங்கி, இலங்கை கரைக்கு இணையாக 500 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழக கரைக்கு இணையாக 600 கிலோ மீட்டர் தொலைவிலும் வடக்கு நோக்கி நகரும்.

டிசம்பர் 21 22 23 ஆகிய தேதிகளில் இது இலங்கை தமிழக கரைக்கு இணையாக வடக்கு நோக்கி நகரும்.

இதன் காரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விட்டு விட்டு மழை பொழிகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டம் தெற்கு பகுதி ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை முதல் மிதமான மழை வரை விட்டு விட்டு பொழியும் நிலையில், வேதாரண்யம் ஒன்றிய பகுதி மற்றும் தலைஞாயிறு கடலோரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழையாக பொழிகிறது.
அதேபோல் ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளிலும் மழை காணப்படுகிறது.

டிசம்பர் 22 23 தேதிகளில் சற்று வடக்கு நோக்கி நகரும் என்பதால் இன்று போல் வேதாரண்யம் பகுதியில் மழை இருக்காது சற்று குறைவாக இருக்கும்.

டிசம்பர் 23 வரை எந்த அளவிற்கு வடக்கு நோக்கி நகர்கிறதோ அந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு பகுதியில் கரை கடக்க வாய்ப்பு இருக்கிறது.

டிசம்பர் 24 தென்மேற்கு திசை நோக்கி திரும்பி வட இலங்கை அருகே அடையும்.

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று நன்கமைந்த தாழ்வு பகுதியாக வட இலங்கை வழியாகவோ, மத்திய இலங்கை வழியாகவோ இலங்கையின் மேற்கு பகுதியை அடைத்து மன்னார் வளைகுடா வழியாக நகர்ந்து குமரிக்கடல் வழியாக அரபிக் கடலுக்கு செல்லும்.

டிசம்பர் 21 22 23 தேதிகளில் டெல்டாவின் கடலோரப் பகுதிகளில் மழை இருக்கும் மேலும் தென்கடலோரம் மழை இருக்கும்.

இது தவிர பிற இடங்களில் வானம் மேகம் சூழ்ந்து காணப்படும், குளிர் நிலவும். டிசம்பர் 23 க்குள் தேவையான நீரை மட்டும் பாய்ச்சுங்கள்.

டிசம்பர் 24 முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக டிசம்பர் 25 26 27 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் கனமழை காத்திருக்கிறது.
மத்திய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது. கர்நாடக எல்லையோரம் ஆந்திர எல்லை வரும் வரை ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும். வடகடலோரம் கூட நல்ல மழை பொழிவு எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் 28 29 தேதிகளில் அரபிக்கடலில் சென்று கிழக்கு காற்றில் இருக்கும் என்பதால் மழை பொழிவு டிசம்பர் 29 வரை ஆங்காங்கே ஆங்காங்கே தொடரும்.

*டிசம்பர் 25 நிகழ்வு நெருங்கி கரை ஏறும் வரை நல்ல மழை பொழிவை கொடுக்கும். பிறகு
நிகழ்வு டிசம்பர் 25 பிற்பகல் அல்லது இரவு இலங்கை தரை ஏறி நிற்கும் பொழுது தீவிரம் குறைந்து இருந்தாலும் மன்னார் வளைகுடாவில் இறங்கி குமரி கடல் செல்லும் வரை நிறைய மழைப்பொழிவு வாய்ப்பு இருக்கிறது.

நிகழ்வு எந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு முனையில் கடக்கிறதோ அந்த அளவிற்கு டெல்டா மாவட்டங்களின் மழைப்பொழிவு கூடும் அதேபோல் குமரிமுனையை எந்த அளவிற்கு நெருங்கி வருகிறதோ அந்த அளவிற்கு தென்மாவட்டம் மழை பொழிவு கூடுதலாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *