டிச 26,27 கனமழை எங்கெங்கே? உங்களுக்கு எப்படி? இரவு வானிலை அறிக்கை

டிச 26,27 கனமழை எங்கெங்கே? உங்களுக்கு எப்படி? இரவு வானிலை அறிக்கை

2022 டிசம்பர் 25 மாலை 4 மணி நிலவர ஆய்வறிக்கை.

இலங்கை திருவண்ணாமலை அருகே தாழ்வு மண்டலம் கரை ஏறியது. தற்பொழுது தீவிரத்தாழ்வு பகுதியாக செயலிழந்து இலங்கையின் வடக்கு தரையை மையமாக வைத்து சுழன்று கொண்டிருக்கிறது.

தரையில் நீடித்துக் கொண்டிருப்பதால் சற்று விட்டம் அதிகரித்து பரவி இருப்பதால் தமிழக உள் மாவட்டங்களில் மழை தொடங்கி இருக்கிறது.

கிழக்கு வடகிழக்கு குளிர் காற்று உள் மாவட்ட வெப்பநிலையால் மேகம் உருவாகி புதுக்கோட்டை மாவட்ட மேற்கு பகுதி, சிவகங்கை மாவட்ட காரைக்குடி பிள்ளையார்பட்டி பகுதி, கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்ட பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகள் இடி மழை பெய்கிறது.

மேலும் அனைத்து உள் மாவட்டங்களிலும் வரக்கூடிய மணி நேரங்களிலே முன்னேறி ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை கொடுக்கும்.

நிகழ்வு மீண்டும் தீவிரமடைந்து குமரி கடல் வழியாக அரபிக்கடல் நோக்கி நகரும் என்பதால் இன்றைய மழைப்பொழிவை விட டிசம்பர் 26 திங்கட்கிழமை மழை பொழிவு கூடுதலாக இருக்கும்.

மன்னார்வளைகுடாவின் தெற்கு பகுதியில் இறங்கி நிலநடுக்கோட்டு வெப்பக் காற்றை ஓரளவு பெற்று மீண்டும் தீவிரமடைந்து வடகிழக்கு காற்றை கிழக்கு காற்றை ஈர்த்து கண்டிப்பாக தமிழகத்தில் மழை பொழிவை டிசம்பர் 27 வரை கொடுக்கும்

டெல்டா மாவட்டங்களின் தெற்கு பகுதிக்கும் தென் மாவட்டங்களின் கடலோர பகுதிக்கும் தென் மாவட்டங்களின் உள்பகுதிக்கும் தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கும் கண்டிப்பாக நல்ல மழை பொழிவு கொடுக்கும்.

பாலக்காடு கணவாய் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கும் மத்திய உள் மாவட்டங்களுக்கும் வடக்கு டெல்டாவிற்கும் அதனை ஒட்டிய வடமாவட்டங்களுக்கும் மழை பொழிவை கொடுக்கும்.

கர்நாடக எல்லையோரம் ,ஆந்திர எல்லையோரம் வரை மழை முன்னேறும் என்றால் உங்களுக்கும் மழை கிடைக்கும் என்று அர்த்தம்.

ஆக குறைந்தபட்சம் நனைக்கும் லேசான மழை முதல் மிதமான மழை வரை கர்நாடக ஆந்திரா எல்லையோரம் கிடைக்கும்.

பிற மாவட்ட பகுதிகளுக்கு இதைவிட கூடுதல் மழை தான் என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் சென்றதும் டிசம்பர் 26,27 தேதிகளில் தென் கடலோரம் மிதமான காற்றுடன் கனமழை இருக்கும்.

நிகழ்வு எந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு முனையில் கடக்கிறதோ அந்த அளவிற்கு டெல்டா மாவட்டங்களின் மழைப்பொழிவு கூடும் அதேபோல் குமரிமுனையை எந்த அளவிற்கு நெருங்கி வருகிறதோ அந்த அளவிற்கு தென்மாவட்டம் மழை பொழிவு கூடுதலாகும்.

இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு பகுதியில் கரை கடக்கும் என்றாலும் இலங்கையின் வடக்கு பகுதியில் நல்ல மழை பொழிவை கொடுக்கும் அதே நேரத்தில் இலங்கையின் மத்திய தெற்கு பகுதி கல்முனை தொடங்கி கொழும்பு வரை அனுராதாபுரத்திற்கு தெற்கே மலை பகுதிகள் ரத்னபுரா கண்டி, கல்முனை அம்பாறை போன்ற பகுதிகளுக்கு பாதிக்கும் மழை தெரிகிறது. இலங்கையின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படலாம்

ந.செல்வகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *