ஜன 23 முதல் பிப் 7 வரை குழப்பும் வானிலை,குளிர் & மழை

அறுவடை விவசாயிகளுக்கு அத்யாவசியமான ஆலோசனை

2023 ஜனவரி 18 அதிகாலை ஆய்வறிக்கை

மழை இடையூறுகள் குறுக்கீடுகள் இருக்கும் என்பதை அறியாத விவசாயிகளுக்கும் அறிவிக்க வேண்டிய செய்தி:

அடுத்த வாரம் முதல் ஆங்காங்கே ஆங்காங்கே குளிர் பனிப்பொழிவுக்கு இடையே மழை பொழிவு. ஜனவரி 25 முதல் உறுதி.அறுவடை விவசாயிகள் வானிலை அறிக்கையுடன் இணைந்து திட்டமிட்டு அறுவடை செய்க.

நீலகிரி மாவட்ட உறைபனி சற்று குறைந்து கடும் குளிர் காணப்படுகிறது.
நீலகிரி உறைபனி ஜனவரி 18 வரை தொடரும்.

பிற மாவட்ட நடுங்க வைக்கும் குளிர் ஜனவரி 21 வரை தொடரும். ஜனவரி 19 முதல் கிழக்கு சாரல் காற்றுடன் குளிர் இருக்கும்.

2023 ஜனவரி 23 க்கு மேல் பிப்ரவரி 10 க்குள் குளிர் ,பனிப்பொழிவு,மேகமூட்டம் ,தூறல் ,சாரல், ஆங்காங்கே மழை என்று மாறி மாறி வானிலை அமையும்..

மேற்கத்திய இடையூறு:
மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் மேற்கத்திய இடையூறு காஷ்மீர் இமாச்சல்பிரதேசம், உத்தரகாண்ட் சிக்கிம் ஆகிய இந்திய மாநில பகுதிகளுக்கும், அண்டை நாடான நேபாளம் பூட்டான் பகுதிகளுக்கும் பனி மழை பொழிவு, கடும் குளிர் காற்று , உறைபனியை உருக செய்யும் மழை வரக்கூடிய வாரத்தில் அமையும். இது பஞ்சாப் ஹரியானா டெல்லி உத்திரப்பிரதேசம் பீகார் சண்டிகர் போன்ற பகுதிகளுக்கும் வரும் வாரம் மழை பொழிவை கொடுக்கும். அதே நேரத்தில் பனிச்சரிவையும் ஏற்படுத்தலாம்.

குளிர் மற்றும் மழைக்கு செட்டாகும் செட்டிங்:

மேற்கத்திய இடையூறு, இந்திய நிலப்பகுதி உயர் அழுத்தம்,வட இந்திய நிலப்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் காற்று சுழற்சி ,இவைகளுக்கு இடையே வெப்ப குளிர் காற்று சதவீதம் சரியாக அமைந்து தமிழ்நாட்டின் கர்நாடக ஆந்திர கேரளா எல்லையோரம் வரை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி அவ்வப்பொழுது அருகருகே கூடுதல் குறைவாகவும் மழை பொழிவிற்கு சாதக அமைப்பு அமைகிறது.

குளிர் மழை
ஜனவரி 23 24 டெல்டா கடலோரம் தென்கடலோரம் நனைக்கும் மழை வாய்ப்பு.

ஜனவரி 23 24 ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி கடலோரம் மழை உறுதி. தெற்கு டெல்டா புதுக்கோட்டை கடலோரம் கூடுதல் வாய்ப்பு.

ஜனவரி 25 26 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கூடுதல் பரப்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு தெரிகிறது.
குடியரசு தின கொண்டாட்ட நேரத்தில் காலை கடலூர் புதுச்சேரி மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு தெரிகிறது.
கண்டிப்பாக ஜனவரி 25 26 மதியம் பரவலாக மழைக்கு வாய்ப்பு.

குடியரசு தினத்திற்கு முதல் நாள் கண்டிப்பாக கடலோரம் மிதமான மழைப்பொழிவு இருக்கும்.

ஜனவரி இறுதி வாரம் மற்றும் பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே அவ்வப்பொழுது மழைப்பொழிவு தெரிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து ஊர்களிலும் பெய்யாது அவ்வப்பொழுது ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே பொழியும். அறுவடை நேரத்தில் குழப்பும் வானிலை, தூறல் வானிலை, நனைக்கும் மழை வானிலை ,லேசான மிதமான மழை வானிலை, என்று அனைத்தும் பனிப்பொழிவிற்கு இடையே இருக்கும். பிப்ரவரி 15 வரை கூட இப்படி அமையலாம்.

பாதிக்கும் மழையாக இருக்காது.
அறுவடை செய்தபின் வைக்கோல் சேமிப்பதில் உலர்த்துவதில் இடையூறு செய்ய வாய்ப்பிருக்கிறது.
அறுவடை நாளை குறிப்பதில் குழப்பம் தொடர்ந்து நீடிக்கும். மழை பொழிவு தொடர்ந்து பெய்யாது. மழை குறிக்கீடு இருக்கும் .குழப்பம் அதிகம் இருக்கும்.
அச்சமின்றி,
இடைவெளி அறிந்து ,
ஆறுவடை செய்க.

ந. செல்வகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *