தீவிரமாகி நெருங்கி வரும் மண்டலம். மழை அதிகரிக்கும்.எங்கே? எப்படி?

மாலை இரவு, நாளை திரும்புபவர்கள் குடை, கோட் கையில் எடுத்துச் செல்லுங்கள்.
தானியங்களையும் பாதுகாத்திடுங்கள்.

2023 ஜனவரி 31 செவ்வாய் அதிகாலை ஆய்வறிக்கை

தீவிரமாகி நெருங்கி வரும் மண்டலம் வடஇலங்கை கடக்கும். மழை அதிகரிக்கும்.
மழை எங்கே எப்படி?

வங்கக் கடலில் உருவான தாழ்வு மண்டலம் நேற்று இரவுக்கு மேல் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

இது ஜனவரி 31 அதிகாலை 4 மணி நிலவரப்படி கோடியைக்கரைக்கு தென்கிழக்கு 500 கிலோ மீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்திற்கு கிழக்கு தென்கிழக்கு 400 கிலோமீட்டர் தொலைவிலும், முல்லை தீவிற்கு கிழக்கு தென்கிழக்கு 350 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோண மலைக்கு கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்து அதே தீவிரத்துடன் திரிகோணமலைக்கு அருகே பிப்ரவரி 1 கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழங்கில் கரை கடக்கும் என்பதாகும், தீவிரமாக கரை கடக்கும் என்பதாலும், நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் வெப்பநீராவில் கூடுதல் கிடைக்க பெறுகின்ற காரணத்தாலும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பாதிக்கும் அதீத மழைப்பொழிவு தெரிகிறது.

கன, மிக கனமழை வாய்ப்பு எச்சரிக்கை
ஜனவரி 31 பிற்பகலுக்கு பிறகு படிப்படியாக மழை தீவிரமடையும் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவி பிப்ரவரி 3 வரை நீடிக்கும்.

மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைவாய்ப்பு கூடுதல் பரப்பில் தெரிகிறது. ஓரிரு இடங்களில் மிக கனமழை இருக்கலாம்.

புதுச்சேரி,தமிழ்நாட்டில் கடலூர் புதுச்சேரி, மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி விருதுநகர் தென்காசி தேனி மதுரை சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கன மழை வாய்ப்பு உள்ளது.
இம் மாவட்டங்களில் பரவலான மழைப்பொழிவு இருக்கும்.

அரியலூர் பெரம்பலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருச்சி திண்டுக்கல் நாமக்கல் கரூர் திருப்பூர் தெற்கு கோயம்புத்தூர் தெற்கு ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே கனமழையும் பரவலாக லேசான மிதமான மழையும் இருக்கும்.

திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழைப்பொழிவு அவ்வப்பொழுது இருக்கும்.

சேலம் ஈரோடு கோயம்புத்தூர் வடக்கு திருப்பூர் வடக்கு நீலகிரி ஆங்காங்கே மிதமான லேசான மழைப்பொழிவு இருக்கும்.

திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை ஆங்காங்கே இருக்கும்.

கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நனைக்கும் மழை தூறல் மழை இருக்கும்.

ஜனவரி 31 பிப்ரவரி 1,2,3 வானிலை

வரும் 72 மணி நேரங்கள் வானம் மேகம் சூழ்ந்து குளிர் வானிலை நிலவும் இடையிடையே மழைப்பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி கொடுக்கும்.பிப்ரவரி 3 வரை மழைக்கு சாதகம்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே நனைக்கும் மழை முதல் மிதமான மழை பொழிவு வரை இருக்கும்.

கனமழை உறுதியாக எதிர்பார்க்கும் மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதி, தென்கடலோரப் பகுதிகள், ஒட்டுமொத்த தென் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கன மழை உறுதி.
தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு.

அறுவடை விவசாயிகளுக்கு ஆலோசனை
முதிர்ந்த , அறுவடைக்கு பக்குவம் அடைந்த தானியங்கள் ஜனவரி 31 முற்பகல் நனைக்காமல் இருந்தால் ஜனவரி 31 முற்பகலுக்குள் அறுவடை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

அறுவடைக்கு ஜனவரி 31 பிற்பகல் பிப்ரவரி 1 2 3 தேதிகளில் நாள் குறிக்க வேண்டாம்.
ஜனவரி 31 மாலைக்கு மேல் மழை பொழிவு உறுதி..

அச்சம் பீதி வேண்டாம்

கடந்த வாரம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதிகளில் எதிர்பார்ப்பை விட கூடுதல் மழை பொழிந்து அறுவடை வயல்களில் இன்னும் நீர் தேங்கி உள்ளது.

அதே போல் அகஸ்தியன்பள்ளி கடிநெல்வயல்
பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்க பட்டது.

அப்பொழுது அவர்கள் முன்னெச்சரிக்கை எடுக்காததால் வேதனை அடைந்தார்கள்.

வரக்கூடிய ஜனவரி 31முதல் பிப்ரவரி 3 வரை நல்ல மழை பொழிவு தெரிகிறது.

இலங்கையை கடப்பது உறுதி.
டெல்டா தென் மாவட்டங்கள் மழை உறுதி.
தெற்கு டெல்டா தென்கடலோர மாவட்டங்கள் கனமழை வரை உறுதி.
தென் மாவட்டங்கள் டெல்டாவின் பிற வடக்கு
பகுதிகள், தென் மாவட்டங்களில் பிற பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மிதமானது முதல் சற்று கனமழை உறுதி.
வடகடலோரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் வடக்கு பகுதி மத்திய உள் மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழைப்பொழிவு இருக்கும்.
கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் வடக்கு உள் மாவட்டங்கள் அவ்வப்போது ஆங்காங்கே லேசான மிதமான மழைப்பொழிவு இருக்கும்.

குளிர் காற்று இணைவு சதவீதம் சீராகவும், வெப்ப நீராவி இணைவு சதவீதம் கூடுதலாகியும், மண்டலத்தின் தீவிரத் தன்மை கூடுதலாகியும், இலங்கை நெருங்கி வந்து தீவிர தன்மையுடன் வட இலங்கை கடப்பது உறுதி. மேலும் துல்லியம் அறிய அனைத்தும் தொடர்ந்து ஆய்வில் உள்ளது.
ஆய்வறிக்கையுடன் இணைந்தே இருந்து திட்டமிட்ட வேளாண் பணி செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அறுவடை செய்வது எப்போது?

பிப்ரவரி 3 க்குப் பிறகு மழை விலகும் என்பதால் பிப்ரவரி 4 க்கு பிறகு காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம். அச்சம், பீதி வேண்டாம்.

பிப்ரவரி மார்ச் மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது அவ்வப்பொழுது மழை கொடுக்கும்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
31.1.2023 -4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *