திரிகோணமலை அருகே
நாளை கடக்கும் மண்டலம்..
வட இலங்கை அதிகனமழை.
தமிழ்நாட்டில் மழை எங்கே?
எப்போதும்? எவ்வளவு?

மழை தொடங்குவது தாமதம் தவிர விலகவில்லை.
டெல்டா கடலோரம் நள்ளிரவுக்குள் தொடங்கும்.
தானியங்களை மூடி பாதுகாத்திடுங்கள்.

2023 ஜனவரி 31 செவ்வாய் இரவு 7 மணி ஆய்வறிக்கை

தீவிரமாகி நெருங்கி வரும் மண்டலம் வடஇலங்கையை நாளை கடக்கும். வெப்பநீராவி காற்று ஒட்டுமொத்தமும் வடஇலங்கையில் குவிவதால் வடஇலங்கை ஒட்டுமொத்தமும் பாதிக்கும் மழை வாய்ப்பு தெரிகிறது.

இது ஜனவரி 31 மாலை 6 மணி நிலவரப்படி கோடியைக்கரைக்கு தென்கிழக்கு 250 கிலோ மீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்திற்கு கிழக்கு தென்கிழக்கு 175 கிலோமீட்டர் தொலைவிலும், முல்லை தீவிற்கு கிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோண மலைக்கு கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்து அதே தீவிரத்துடன் திரிகோணமலைக்கு அருகே பிப்ரவரி 1 கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழங்கில் கரை கடக்கும் என்பதாகும், தீவிரமாக கரை கடக்கும் என்பதாலும், நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் வெப்பநீராவில் கூடுதல் கிடைக்க பெறுகின்ற காரணத்தாலும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பாதிக்கும் அதீத மழைப்பொழிவு தெரிகிறது.

கனமழை வாய்ப்பு
ஜனவரி 31 இரவு 10 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை தொடங்கும்.

இதற்கு முன் தென் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆங்காங்கே மழை பொழிவிற்கு வாய்ப்பு.

படிப்படியாக மழை சற்று தீவிரமடையும் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் பரவி பிப்ரவரி 3 வரை நீடிக்கும்.

மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைவாய்ப்பு கூடுதல் பரப்பில் தெரிகிறது. ஓரிரு இடங்களில் மிக கனமழை இருக்கலாம்.

புதுச்சேரி,தமிழ்நாட்டில் கடலூர் புதுச்சேரி, மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி விருதுநகர் தென்காசி தேனி மதுரை சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கன மழை வாய்ப்பு உள்ளது.
இம் மாவட்டங்களில் பரவலான மழைப்பொழிவு இருக்கும்.

அரியலூர் பெரம்பலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருச்சி திண்டுக்கல் நாமக்கல் கரூர் திருப்பூர் தெற்கு கோயம்புத்தூர் தெற்கு ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை இருக்கும்.

திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழைப்பொழிவு அவ்வப்பொழுது இருக்கும்.

சேலம் ஈரோடு கோயம்புத்தூர் வடக்கு திருப்பூர் வடக்கு நீலகிரி ஆங்காங்கே லேசான மழைப்பொழிவு இருக்கும்.

திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நனைக்கும் மழை ஆங்காங்கே இருக்கும்.

கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நனைக்கும் மழை தூறல் மழை இருக்கும்.

ஜனவரி 31 நள்ளிரவு பிப்ரவரி 1,2,3 வானிலை

வரும் 72 மணி நேரங்கள் வானம் மேகம் சூழ்ந்து குளிர் வானிலை நிலவும் இடையிடையே மழைப்பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி கொடுக்கும்.பிப்ரவரி 3 வரை மழைக்கு சாதகம்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே நனைக்கும் மழை முதல் மிதமான மழை பொழிவு வரை இருக்கும்.

கனமழை உறுதியாக எதிர்பார்க்கும் மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதி, தென்கடலோரப் பகுதிகள், ஒட்டுமொத்த தென் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கன மழை உறுதி.
தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு.

அறுவடை விவசாயிகளுக்கு ஆலோசனை

வானிலை அறிக்கை அறிந்து பலர் முன்னெச்சரிக்கையாக முதிர்ந்த நெல் தானியங்களை அறுவடை செய்து விட்டார்கள்.

பிப்ரவரி 1 2 3 டெல்டா மாவட்டங்கள் ,தென் மாவட்டங்களில் அறுவடை செய்வது கடினம் மழை பொழிவு இருக்கும்.

அறுவடை செய்வது எப்போது?

பிப்ரவரி 3 க்குப் பிறகு மழை விலகும் என்பதால் பிப்ரவரி 4 க்கு பிறகு காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம். அச்சம், பீதி வேண்டாம்.

பிப்ரவரி மார்ச் மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது அவ்வப்பொழுது மழை கொடுக்கும்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
31.1.2023 -7PM வெளியீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *