இன்று நாளை மழை எங்கெங்கே? உங்களுக்கு எப்படி?

டெல்டாவின் சில இடங்களில்
முன்னிரவில் ஓரிரு மணி நேரம்
மழை வாய்ப்பு.எங்கெங்கே?

03.02.2023-4PM தமிழ்நாடு மாலை வானிலை ஆய்வறிக்கை

03.02.2023-4AM தமிழ்நாடு காலை வானிலை ஆய்வறிக்கை

2023 பிப்ரவரி 3 அதிகாலை ஆய்வறிக்கை

பிப்ரவரி 4 முடிய மழை வாய்ப்பு உள்ளது
தானியங்களை மூடி பாதுகாத்திடுங்கள்.

விளக்க அறிக்கை

தாழ்வு மண்டலம் 3.2.23 அதிகாலை 4 மணி நிலவரம்

தாழ்வு அமைப்பு எங்கே?

இலங்கை கடந்து மன்னார் வளைகுடா இறங்கிய தீவிர தாழ்வுப்பகுதி இலங்கையை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதி வழியாக இணைப்பு சுழற்சியின் ஈர்ப்பின் காரணமாக நிலநடுக்கோட்டு பகுதியை நோக்கி நகர்கிறது.

டெல்டாவில் விட்டு விட்டு கனமழை வாய்ப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைஞாயிறு வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் மட்டும் இன்று அதிகாலை காலை கனமழை நீடித்து வந்த நிலையில் அது நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பகுதியிலும்
டெல்டாவின் பிற பகுதிகளில் பெரிய அளவில் அதிகாலை காலை மழை இல்லை. நனைக்கும் மழை முதல் மெல்லிய தூறல் மழை டெல்டாவில் காணப்படுகிறது.

வேதாரண்யம் ஒன்றியம் , தலைஞாயிறு ஒன்றியம் பகுதிகளில் நீடிக்கும் அதிகாலை மழை சற்று விலகி காலை 10:30 மணிக்கு மேல் டெல்டாவின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே ஆங்காங்கே மதியம் மாலை தொடங்கி விட்டு விட்டு தொடரும்.

டெல்டாவின் இன்றைய மழை நேற்றைய மழையில் பாதியாக இருக்கும். தொடர்ச்சியாக பெய்து கொண்டே இருக்காது. விட்டுவிட்டு ஆங்காங்கே அவ்வப்பொழுது பெய்யும்.

டெல்டாவில் நாளை பிப்ரவரி 4 அதிகாலையும் காலையும் மழை வாய்ப்பு இருக்கிறது. இன்று மழையில் நாளை பாதியாக குறையும்.டெல்டா மழை பிப்ரவரி 4 மதியத்திற்கு பிறகு முற்றிலும் விலகும்.

மேலும் சில மாவட்டங்களுக்கு மழை

இன்று செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி புதுச்சேரி சேலம் ஈரோடு கோயமுத்தூர் திருப்பூர் நாமக்கல் அரியலூர் பெரம்பலூர் கடலூர் உட்பட கரூர் திருச்சி திண்டுக்கல் , தேனி, மதுரை சிவகங்கை விருதுநகர்,மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே அவ்வப்பொழுது சற்று கனமழை வாய்ப்பு தெரிகிறது. ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம்.

சேலம் ஈரோடு நீலகிரி நாமக்கல் பெரம்பலூர் திருச்சி வடக்கு கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் நனைக்கும் மழை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி ஒரு சில இடங்களில் இருக்கும். இம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது தவிர கனமழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு வடக்கு காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே தூறல் அவ்வப்பொழுது இருக்கும்.

கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மேகம் சூழ்ந்து காணப்படும் தூறல் துளி விழலாம் மழைக்கு வாய்ப்பு குறைவு..
இன்றைய மழை நேற்று போல் தொடர்ச்சியாக பெய்யாது ஆங்காங்கே ஆங்காங்கே அவ்வப்பொழுது அவ்வப்பொழுது பொழியும்.

பிப்ரவரி 4 மழை வாய்ப்பு பகுதிகள்;

டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும். இன்றைய மழையில் நாளை பாதியாக குறையும்.

டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரி 4 மதியத்திற்கு பிறகு மழை முற்றிலும் விலகும்.

தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை பிப்ரவரி 4 இரவுடன் மழை நிறைவடையும்.

அறுவடை செய்வது எப்போது?

பிப்ரவரி 4 க்குப் பிறகு மழை விலகும் என்பதால் பிப்ரவரி 4 க்கு பிறகு காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம். அச்சம், பீதி வேண்டாம்.
இலங்கைக்கான வானிலை அறிக்கை

தாழ்வு சுழற்சி இலங்கைக்கு தென் மேற்கு பகுதியில் நீடிப்பதால் இலங்கையின் ஒட்டுமொத்த பகுதிக்கும் பிப்ரவரி 4 வரை பரவலான மழைப்பொழிவு உண்டு. பிப்ரவரி 5 இலங்கையின் தெற்கு பகுதியில் தென்கிழக்கு பகுதியில் மழை தொடரும். இலங்கையின் தெற்கு பகுதியிலும் இலங்கையில் பிப்ரவரி 6 மழை விலகும். இலங்கையில் பிப்ரவரி 6 முதல் உலர்ந்த பிறகு அறுவடை செய்யலாம்.

பிப்ரவரி 8,9 இல் குழப்பும் மேகமூட்ட வானிலை மற்றும் பிப்ரவரி மார்ச் வானிலை அறிக்கை.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது அவ்வப்பொழுது மழை கொடுக்கும்.

அதன் அடிப்படையில் பிப்ரவரி 8 ,9 தேதியில் மேலும் ஒரு காற்று சுழற்சி இலங்கை நெருங்கும் என்பதால் தூறல் மழை குழப்பமான வானிலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் முன் எச்சரிக்கைக்கு மட்டுமே.
பிப்ரவரி 5 முதல் தொடங்கும் லேசான மிதமான வெயில் காரணமாக காய்ந்த பிறகு அறுவடை செய்து மீட்டெடுக்க திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
3.2.2023-4AM வெளியீடு.

2 comments

  1. உங்கள் கனிப்பு சிறப்பாக உள்ளது உள்ளபடி அமைய வாழ்த்துக்கள்.,நன்றி

  2. தங்கள் வானிலை முன்னறிவிப்பு மக்களுக்கு நன்கு பயன்படுகிறது.
    வெதர்மேன் செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்.
    An exemplary weatherman and Teacher. Congratulations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *