பிப் 28 மழை எங்கே ? மார்ச் நிகழ்வு எப்படி? மடகாஸ்கர் கடக்கத் தொடங்கிய ஃபிரட்டி

2023 பிப்ரவரி 21 செவ்வாய் இரவு ஆய்வறிக்கை

2023 பிப்ரவரி 21 செவ்வாய் அதிகாலை ஆய்வறிக்கை

பிப்ரவரி 21,22,23,24 வானிலை
வெயில் அதிகரித்து காணப்படும். இரவு அதிகாலை குளிர் நிலவும். மழை வாய்ப்பு இல்லை.

மார்ச் 25 26 வானிலை.
மார்ச் 25 26 சனி ஞாயிறு வெயில் சற்று குறைந்து காணப்படும். கருமேகம் சூழ்ந்த நிலையில் குழப்பமான வானிலை நிலவும். மழைக்கு வாய்ப்பு இல்லை. இரவு நேர குளிர் குறைந்து காணப்படும்.

பிப்ரவரி 27, 28 வானிலை
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பிப்ரவரி 27,28 தேதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். தூறல் வாய்ப்பு டெல்டா மற்றும் தென்கடலோரத்திற்கு தெரிகிறது. இது நனைக்கும் மழை வரை இருக்கலாம் . ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு.
பிப்ரவரி 27,28 வானிலை தொடர் ஆய்வில் உள்ளது.

மார்ச் 1முதல் 15 வரை வானிலை.
தென் சீனா கடற்பகுதியிலிருந்து தாய்லாந்து வளைகுடா வழியாக காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் கடல் பகுதிக்கு மார்ச் 5,6 தேதிகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு அந்தமான் கடப்பகுதியிலேயே மண்டலமாக தீவிரமடையும் சூழல் தெரிகிறது. மேலும் தீவிரமடைந்தால் வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து விலகிச் செல்லும். இதே மண்டலமாக செயல் குறைந்த நிலையில் இருந்தால் மேற்கு நோக்கி தமிழகம் வரலாம். வருமா விலகி செல்லுமா ஆய்வு தொடர்கிறது வந்தால் மார்ச் மத்தியில் ஓரிரு நாள்கள் மழை வாய்ப்பு தெரிகிறது. .ஆய்வு தொடர்கிறது.

மார்ச் 15 க்கு மேல் வானிலை

வெயில் அதிகரிக்கும் வெப்பச்சலன மழை ஆங்காங்கே ஆங்காங்கே தொடங்கும் .

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
21.2.2023-4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *