தொடங்கிய மழை இப்பொழுது எங்கே? நாளை வரை எங்கெங்கே?

2023 பிப்ரவரி 28 செவ்வாய் இரவு ஆய்வறிக்கை

2023 பிப்ரவரி 28 செவ்வாய் அதிகாலை ஆய்வறிக்கை

இன்று 2023 பிப் 28 டெல்டா மற்றும் தென் கடலோரம் கனமழை உறுதி. குறிப்பாக மயிலாடுதுறை முதல் கன்னியாகுமரி வரை கடலோரம் கனமழை வாய்ப்புள்ளது. பிப் 28 உள்ளேயும் மேற்கேயும் ஆங்காங்கே இருக்கும்.
சிங்கப்பூர், மலேசியா வழி நில நடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வந்து வங்கக்கடல் வரும் நிகழ்வு காற்று சுழற்சி மார்ச் 7,8,9,10,11,12 இல் தமிழ்நாடு வந்துயாக மழை தர வாய்ப்பு.

2023 பிப்ரவரி 28 செவ்வாய் அதிகாலை ஆய்வறிக்கை

பிப்ரவரி 28,மார்ச் 1 வானிலை
நாகப்பட்டினம் ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த சுற்றின் முதல் மழை அதிகாலை தொடங்கும்.
பிறகு படிப்படியாக உள்பகுதிகளுக்கு பரவும்.

பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமை கடலோர மாவட்டங்களில் அதிகாலை காலை நேரத்திலும் உள்ளே மதியம் மாலை நேரத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவு மற்றும் மார்ச் 1 அதிகாலையும் ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும்.

தமிழ்நாட்டில் பிப்ரவரி 28 வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும்ஆங்காங்கே தூறல் வாய்ப்பு உள்ளது.

டெல்டா மற்றும் தென்கடலோரத்திற்கு சற்று கன மழை முதல் கனமழை வரை தெரிகிறது.

பிப்ரவரி 28 அதி காலை நாகப்பட்டினம், திருவாரூர் ,காரைக்கால் ,மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடங்கும் மழை படிப்படியாக புதுக்கோட்டை இராமநாதபுரம் ,சிவகங்கை, தூத்துக்குடி திருநெல்வேலி ,கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே சற்றுகனமழை வரை பொழியும்.

தென்காசி, விருதுநகர் ,தேனி ,மதுரை, திண்டுக்கல் ,திருச்சி, கரூர்,திருப்பூர், கோயம்புத்தூர் ,பெரம்பலூர் அரியலூர் கடலூரில் மாவட்டங்களிலும் லேசான மிதமான மழை ஆங்காங்கே பொழியும்.

பெரம்பலூர் ,திருச்சி வடக்கு, நாமக்கல் ,ஈரோடு, நீலகிரி, கடலூர் ,மேற்கு விழுப்புரம் ,புதுச்சேரி கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் தூறல் அல்லது நனைக்கும் மழை ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும்.

திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே தூறல் விழும்.
ஓரிரு இடங்களில் நனைக்கலாம்.

மார்ச் 2,3,4,5,6 வானிலை
மார்ச் 2,3,4,5,6 ஆகிய நாட்களில் வங்கக் கடலில் நிகழ்வு உருவாக நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் இரு வேறு நிகழ்வுகள் இணைந்து தீவிரமடைந்து கொண்டிருக்கும். கடலில் நிகழ்வு உருவாகி நெருங்கிய வர மார்ச் 7 வரை தாமதம் ஆகும் .

மார்ச் 7, 8 ,9, 10 ,11,12 வானிலை
நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் காற்று சுழற்சி நீடிக்கும். இந்தக் காற்று சுழற்சியுடன்
தென் சீனா கடற்பகுதியிலிருந்து தாய்லாந்து வளைகுடா சிங்கப்பூர் மலேசியா வழியாக வரும் காற்று சுழற்சியும் அந்தமான் கடல் பகுதிக்கும் இலங்கைக்கும் இடையே மார்ச் 3,4,5 தேதிகளில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு வேறு நிகழ்வுகள் இணைந்து இலங்கை கடற்பகுதியில் சற்று தீவிரமடையும் பிறகு செயல் குறைந்த நிலையில் மேற்கு வடமேற்கு நோக்கி தமிழகம் வரலாம். தமிழ்நாட்டிற்கு மார்ச் 7 8 9 10,11,12,13 இல் வந்து கூடுதல் பரப்பில் மழையை கொடுக்க வாய்ப்பு தெரிகிறது.
துல்லியம் அறிய ஆய்வு தொடர்கிறது.

மார்ச் 15 க்கு மேல் வானிலை
மார்ச் 15க்கு மேல் மேலும் ஒரு நிகழ்வு நெருங்கி வர வாய்ப்புள்ளது. வந்தால் ஓரிரு நாள்கள் மழை b தரும்.இல்லாவிட்டால் வெயில் அதிகரிக்கும் வெப்பச்சலன மழை ஆங்காங்கே ஆங்காங்கே தொடங்கும் .

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
28.2,.2023-4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *