சூரியனின் குத்துக்கதிர் இன்று விழும் பகுதி.உச்சம் தொட்ட வெப்பம்.

2023 ஏப்ரல் 11அதிகாலை ஆய்வறிக்கை

இன்று சூரியனின் குத்துக்கதிர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வடக்கு பகுதி , திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்கு பகுதி தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியில் நண்பகலில் விழும், சரியாக 12 மணி 20 நிமிடத்திற்கு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பொருளின் நிழல் அதன் மீதே விழுந்து விடும் நிழல் தரையில் விழாது.

இப்படி சூரியனின் குத்து கதிர் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதியில் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களில் விழும்.

உயர் அழுத்த அமைவிடமும் காற்றின் போக்குவரத்தும்
அந்தமானை ஒட்டிய வங்கக்கடல் பகுதியை மையமாக வைத்து ஆந்திர பிரதேசம் அந்தமான் இடைப்பட்ட பகுதியில் உயர் அழுத்தம் நிலவுகிறது. இந்த உயர் அழுத்த காற்று வடதமிழகம் தெற்கு ஆந்திரா தெற்கு கர்நாடகா இடைப்பட்ட பகுதியில் நுழைகிறது.

தமிழ்நாட்டின் தென் பகுதியில் சூரியனின் குத்து கதிர் விடுவதால் குமரிக்கடல் மன்னார் வளைகுடா தெற்கு அரபிக் கடல் தென்தமிழகம் பகுதியில் காற்று லேசாகி மேலே எழுந்து தெற்கு கேரளா, தென் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு சில இடங்களில் மாலை இரவு இடிமழையை கொடுக்க சாதகம் தெரிகிறது.


தமிழ்நாட்டின் வட கடலோர கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் உயர் அழுத்தம் காரணமாக அதிகாலையில் குளிர்ந்த காற்று நுழைகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தெற்கு கர்நாடகாவிலும் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

மாலை நேரங்களில் தென் மாவட்ட மேற்கு பகுதியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. அது குறைந்த பரப்பில் குறைவான மழை பொழிவை கொடுக்கும் .

ஏப்ரல் 11 முதல் 20 வரை
ஏப்ரல் 11 க்கு மேல் வெப்பம் புழுக்கம் அதிகரிக்கும், கேரள கர்நாடகா எல்லையோரம் பெரும்பாலும் தெற்கு கேரளா மற்றும் கன்னியாகுமரி மேற்கு பகுதி ஒரு சில இடங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு.

ஏப்ரல் மே கோடை மழை
ஏப்ரல் நான்காவது வாரம் மற்றும் மே மாதம் கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா 6?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.

வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
11.4.2023-4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *