இடிமழை இன்றும்வரும் நாள்களும்எங்கெங்கே

2023 ஏப்ரல் 3 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை

ஏப்ரல் 3 முதல் 5 வரை வானிலை
இன்று முதல் ஏப்ரல் 5 வரை கூடுதல் பரப்பில் ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவு இடி மழை கொடுக்கும்.

வங்கக் கடலோர மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மதியம் மாலை இடி மழை இருக்கும்.

மத்திய உள் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை சேலம் இடைப்பட்ட மத்திய பகுதியில் நல்ல மழை வாய்ப்பு உள்ளது.

ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே ஆங்காங்கே பெய்யும் மழை வரக்கூடிய நாட்களில் உங்களுக்கும் ஒரு நாள் பெய்யும்.

கன்னியாகுமரி முதல் ஆந்திரா எல்லை வரை மத்திய மாவட்டங்கள் வரை மத்திய பகுதியில் ஆங்காங்கே நல்ல மழை தெரிகிறது.

ஏப்ரல் 6 முதல் 20 வரை
வங்கக்கடலோரம் மழைக்கு வாய்ப்பு குறைவு. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் குறைந்த பரப்பில் ஆங்காங்கே இருக்கும். கேரளா கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவு இடிமழை இருக்கும்.

ஏப்ரல் மே கோடை மழை
ஏப்ரல் நான்காவது வாரம் மற்றும் மே மாதம் கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா 6?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும்.

அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.

வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
3.4.2023-4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *